ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து ஈரோடு மாவட் டம், பவானி தாலுகா முழுவதும் மார்க் சிஸ்ட் கட்சி சார்பில் திங்களன்று மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.இதில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிபி.பழனிச்சாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஏ.ஜெகநாதன், எஸ்.மாணிக்கம், பவானி தாலுகாச் செயலாளர் ஆர்.பிரகாஷ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.