திருப்பூர், ஜூலை 31 - தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் தூய்மைப் பணியை தனியார்மயப்படுத்தக் கூடாது என்று திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநாடு வலியுறுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள் ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 3ஆவது மாநாடு திருப்பூர் காந்தி நகர் எம்.சி. மஹாலில் ஞாயிறன்று நடைபெற் றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.பழனி சாமி தலைமை ஏற்றார். சம்மேளனக் குழு உறுப்பினர் என்.சங்கர்குமார் வரவேற்றார். சிஐடியு கட்டிட கட்டுமானத் தொழிலாளர் சம் மேளன மாநிலப் பொதுச் செயலாளர் டி. குமார் துவக்கிவைத்து உரையாற்றினார். சங் கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ரங்க ராஜ் வேலை அறிக்கையை முன்வைத்தார். மாவட்டப் பொருளாளர் கே.பாலதண்ட பாணி வரவு - செலவு அறிக்கையை முன் வைத்தார். இந்த மாநாட்டை வாழ்த்தி திரு முருகன் பூண்டி நகராட்சி மார்க்சிஸ்ட் கட்சி நகர்மன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் உரை யாற்றினார்.
தீர்மானங்கள்
தூய்மைப் பணியை தனியார் மயமாக் கும் நடவடிக்கையை உள்ளாட்சி நிர்வாகங் கள் கைவிட வேண்டும். தூய்மைக் காவலர்க ளுக்கு மாதம் ரூ.3600 ஊதியம் போதுமான தல்ல, கூடுதல் ஊதியம் நிர்ணயித்து, அவர்க ளைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அர சாணை 2 டி 62இன் படி தினக்கூலி தொழிலா ளர்களுக்கு அரசாணை நிர்ணயித்த ஊதி யம் வழங்க வேண்டும். மேல்நிலை தொட்டி நீரேற்று பணியாளர்கள் (ஓஎச்டி ஆப்ரேட் டர்) ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த ஊதி யத்திலுள்ள ஊதிய முரண்பாடுகளைக் களைந்து மாநிலம் முழுவதும் ஒரே மாதி ரியான ஊதியம் வழங்க வேண்டும், கொசுப் புழு ஒழிப்புப் பணியாளர்களுக்கு (டிடிசி) தின ஊதியம் ரூ.500ஆக உயர்த்தி, அவர்களை யும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற ஓஎச்டி ஆப்ரேட்டர்களுக்கு தூய் மைப் பணியாளர்களுக்கு வழங்குவது போல் ஓய்வு பெறும்போது பணிக்கொடை ரூ.50 ஆயிரமும், மாத ஓய்வூதியம் ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். திருப்பூர் மாநகராட்சியில் வேலை செய்யும் ஒருங்கிணைந்த பகுதி குடி நீர் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர் களை பணி நிரந்தரம் செய்து உரிய ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு
இம்மாநாட்டில் சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவராக பி.பழனிசாமி, மாவட்ட செயலா ளராக கே.ரங்கராஜ், மாவட்ட பொருளாள ளராக உடுமலை ஈஸ்வரன் ஆகியோரும், ஐந்து துணைத் தலைவர்கள், ஐந்து உதவிச் செயலாளர்கள் மற்றும் 15 நிர்வாகக்குழு உறுப்பினர்கள், ஏழு சிறப்பு அழைப்பாளர் கள் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டின் முடிவில் சிஐடியு திருப் பூர் மாவட்ட தலைவர் கே.உண்ணிகிருஷ் ணன் நிறைவுரை ஆற்றினார். திருப்பூர் மாவட் டம் முழுவதும் இருந்து நானூறுக்கும் மேற் பட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.