திருப்பூர், அக்.24- பித்தலை, செம்பு, எவர்சில்வர் பாத் திரத் தொழிலாளர்களுக்கு சென்ற ஆண்டை காட்டிலும் கூடுதலான போனஸ் வழங்க அனைத்து பாத்திரத் தொழிலாளர் சங்கங்களின் ஆலோ சனை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. அனைத்து பாத்திரத் தொழிலாளர் சங்கங்களின் ஆலோசனை கூட்டம் வியாழனன்று வேலம்பாளையம் எல் பிஎப் அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்துப் பாத்திரத் தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ந.வேலுசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட் டத்தில், சிஐடியு சார்பில் எ.ஆறுமுகம், பி.மணி, எடிபி சார்பில் ஆர்.தேவராஜ், எல்.பி.எப் சார்பில் மு.ரத்தினசாமி, எஸ்.கஜேந்திரன், எஐடியுசி சார்பில் எஸ்.செல்வராஜ், பி.நாகராஜ், எச்.எம்.எஸ் சார்பில் கே.திருஞானம், எஸ். பாண்டியராஜ், காமாட்சியம்மன் சங்கம் சார்பில் எஸ்.பி.அர்ஜூனன், எம்.சண்மு கசுந்திரம், ஐஎன்டியுசி சார்பில் வி.ஆர். ஈச்வரன், எ.அசோக், பி.எம்.எஸ் சார்பில் எ.டி.சீனிவாசன், எம்.லட்சுமனநாரய ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் தீபாவளி பண்டிக்கைக்கு இன் னும் சில நாட்களே உள்ள நிலையில் பாத்திரத் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்படாமல் உள்ளது. எனவே உடனடியாக பித்தலை, செம்பு, எவர் சில்வர் பாத்திரத் தொழிலாளர்களுக்கு சென்ற ஆண்டை காட்டிலும், கூடுத லான போனஸ் இந்த ஆண்டு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.