districts

img

கடையை சேதப்படுத்திய யானைகள்

கோவை, ஏப்.27- கோவை அருகே மளிகை  கடையை சேதப்படுத்திய காட்டு யானைகளால் மக்கள்  அச்சத்திற்குள்ளாகி உள் ளனர்.  கோடை காலம் துவங்கி யுள்ள நிலையில்,  குடிநீர்  தேடி வனப்பகுதி இருந்து  அடிக்கடி வெளியேறு கின்றன.  இதில் தடாகம், மாங் கரை, ஆனைக்கட்டி  ஆகிய  பகுதிகளில் காட்டு யானை கள் நடமாட்டம் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில், நள்ளிரவு தடாகத்தை அடுத்த வீரபாண்டி புதூர் கிராமத்திற்குள் குட்டியானையுடன் புகுந்த காட்டு யானைகள் கிரிதரன் என்பவரது மளிகைக் கடையை சேதப்படுத்தி அங்கிருந்த உணவுப்  பொருட்களை உட்கொண்டது. இதனை யடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை யினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி னார். இதனை அப்பகுதி மக்கள் செல் போனில் பதிவு செய்துள்ளனர்.   இந்நிலையில், வனத்துறையினர்  இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற் கொண்டு யானைகள் ஊருக்குள் வருவதை  தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி  மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத் துள்ளனர். அதே சமயம் வனப்பகுதிகளுக்கு உள் ளேயே காட்டுவிலங்குகளுக்கு குடிநீர் மற்றும் உணவு ஆதாரங்களை ஏற்படுத்தி தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.