கபிலர்மலையில் தேர்தல் பொதுக்கூட்டம்
கபிலர்மலையில் தேர்தல் பொதுக்கூட்டம் நாமக்கல், ஏப்.15- கபிலர்மலையில் இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆத ரித்து நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் வட்டம், கபிலர் மலையில் ‘இந்தியா’ கூட்டணியின் நாமக்கல் மக்களவை தொகுதி கொமதேக வேட்பாளர் மாதேஸ்வரனை ஆதரித்து தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக கபிலர்மலை ஒன்றியச் செயலாளர் கே.கே.சண்முகம் தலைமை வகித்தார். இதில் திமுக துணைப் பொதுச்செய லாளர் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., நாமக்கல் மேற்கு மாவட் டச் செயலாளர் மதுரா செந்தில், பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, சேலம் மாநகராட்சி முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷனி ஆகியோர் கலந்து கொண்டு மாதேஸ்வரனை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசி னர்.
தொழிலதிபர் வீட்டிலிருந்து பணம் பறிமுதல்
தொழிலதிபர் வீட்டிலிருந்து பணம் பறிமுதல் நாமக்கல், ஏப்.15- நாமக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு, ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்த னர். நாமக்கல், பரமத்தி சாலை, இபி காலனியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்லப்பன் வீட்டில், பறக்கும் படை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில், இந்த சோதனை நடைபெற்றது. சுமார் 4 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் முடிவில், செல்லப்பன் வீட்டிலிருந்து கணக் கில் வராத ரூ.1 கோடியே 1 லட்சத்து 5 ஆயிரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், அவ ரது வீட்டில் இருந்து சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளதாக கூறப் படுகிறது. கடந்த 2 வாரத்துக்கு முன்பு, நாமக்கல்லைச் சேர்ந்த பேருந்து அதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, ரூ.4.50 கோடியை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். நாமக்கல்லில் இதுவரை சோதனை நடத்தப்பட்ட இரண்டு பேருமே, தொழிலதிபர்கள் மற்றும் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம், எந்த அரசியல் கட்சியினருக்கு உரியது என்பது குறித்து, வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
போதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய விஏஓ
போதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய விஏஓ நாமக்கல், ஏப்.15- பரமத்திவேலூர் அருகே குடிபோதையில் காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய, கிராம நிர்வாக அலுவலர் உட்பட 5 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் காவல் நிலை யத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் குமார். இவர் சுண்டபணை பிரிவு அருகே, இருசக்கர வாகன விபத் தில் சேதமடைந்த 2 வாகனங்களை எடுத்து வர மினி ஆட்டோ வுடன் சென்றுள்ளார். திரும்பி வரும் போது, சுண்டப்பனை பிரிவு சாலை பகுதியில், வாகனங்கள் செல்ல முடியாத அள வில் சாலையின் குறுக்கே அமர்ந்து 5 பேர் மது அருந்தி யுள்ளனர். மினி ஆட்டோ அப்குதியை கடக்க முடியாததால், அங்கிருந்தவர்களிடம் ஆட்டோ டிரைவர் பரத்குமார் ஆட்டோ செல்ல வழி விடுமாறு கூறியுள்ளார். அதற்கு அங்கி ருந்த நபர்கள் குடிபோதையில் ஆட்டோவின் கண்ணாடியை உடைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆட்டோவுக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த காவல் உதவி ஆய்வாளர் குமார், இதை தட்டிக்கேட்டபோது, அவர்கள் வாக்குவாதம் செய்து, குமாரை சரமாரியாக தாக்கியுள்ள னர். இதில் முகத்தில் காயமடைந்த அவர், பரமத்திவேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற ஆய்வாளர், அங்கு குடிபோதையில் இருந்த 5 பேரையும், காவல் நிலையத் திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டார். அதில், பொத்தனூரைச் சேர்ந்த கிராம நிர்வாக அலு வலர் சிவபிரகாசம் (41), பரமத்திவேலூரைச் சேர்ந்த லெனின் (27), அதேபகுதியைச் சேர்ந்த முகிலன் (26), பொத்தனூ ரைச் சேர்ந்த திலீபன் (32), பூபதி (30) ஆகியோர் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த, பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் விசாரணை நடத்தினார். 5 பேரின் தாக்குதலால் காயமடைந்த குமார், பர மத்திவேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகி றார். இச்சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனை முன்பு தேர்தல் பிரச்சாரம்: கட்டுப்பாடு விதிக்க கோரிக்கை
நாமக்கல், ஏப்.15- குமாரபாளையம் பகுதி அரசு மருத்துவமனை முன்பு அரசியல் கட்சியினர், ஒலிபெருக்கியின் அளவை அதிகப்படுத்தி பிரச்சாரத் தில் ஈடுபட்டதால், நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ஞாயிறன்று குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் உள்ள பூக் கடைகள், பழக்கடைகள் ஆகிய வற்றில் பொதுமக்கள் குவிந்தனர். எடப்பாடி சாலை தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதி கம் காணப்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. இத னால் பொதுமக்கள் சின்னப்ப நாயக்கன்பாளையம், காவேரி நகர் செல்ல முடியாத நிலையும், தேவூர், எடப்பாடிக்கு பேருந்துகள் போக முடியாத நிலையும் ஏற்பட்டது. இதனருகில் அரசு மருத்துவமனை இருப்பதால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட போக முடியாத நிலை ஏற்பட்டது. இதுதவிர இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல் வேறு அரசியல் கட்சியினர் அரசு மருத்துவமனையின் முன்பு வாக னத்தை நிறுத்தி, ஒலிபெருக்கி அளவை அதிகப்படுத்தி பிரச்சாரம் செய்தனர். இதனால் அவசர சிகிச் சைக்கு வந்த நோயாளிகள் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை மருத்து வர்களிடம் சொல்ல முடியாமல் சிர மத்திற்குள்ளாகினர். உள் நோயா ளிகளாக இருப்பவர்கள், பிரசவத் திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப் பிணிகள், பிறந்த குழந்தைகள் உட் பட அனைவரும் ஒலிபெருக்கி யின் சத்தத்தால் பெறும் அவதிக் குள்ளாகினர். தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் சில நாட் களே உள்ளதால், அரசியல் கட்சி யினர் தங்கள் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்துவார்கள். எனவே, அரசு மற்றும் தனியார் மருத்துவ மனை உள்ள பகுதிகளில் பிரச்சா ரம் செய்ய கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என நோயாளிகள் மற் றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
சாலை விபத்தில் வடமாநில இளைஞர் பலி வேகத்தடை அமைக்கக்கோரி சாலை மறியல்
நாமக்கல், ஏப்.15- பள்ளிபாளையம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் வடமாநில இளைஞர் உயிரிழந்த நிலையில், அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப் பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். சேலத்தில் இருந்து ஈரோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை, மகுடஞ்சாவடியைச் சேர்ந்த சக்திவேல் என்ப வர் இயக்கியுள்ளார். அவர் பள்ளிபாளை யம் அருகே உள்ள வெடியரசம்பாளையம் என்ற பகுதி அருகே வந்த பொழுது, எதிர் பாராத விதமாக சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டியின் மீது தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத் தில் வந்த இளைஞர் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயங்களுடன் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட் டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரி வித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். அதில், உயிரிழந்த நபர் ஒடிசா மாநிலத் தைச் சேர்ந்த ஹிமாஞ்சுல் சாஹூ என்பதும், அவர் பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் நூற்பாலையில் தொழிலாளியாக பணி யாற்றி வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில், அடிக்கடி இச்சாலையில் விபத்துகள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க வேண்டும் அல்லது பேரி கார்டு அமைக்க வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு போலீ சாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரி வித்தனர். இதனை ஏற்காத பொதுமக்கள் பள்ளிபாளையம் சேலம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து உடன டியாக மற்றொரு பகுதியில் இருந்த பேரி கார்டுகளை போலீசார் உதவியுடன் பொது மக்கள் எடுத்து வந்து விபத்து அதிகம் நடக் கும் சாலையில் வைத்தனர்.
மக்களின் தேவைகள் குறித்த கையேடு வெளியீடு
சேலம், ஏப்.15- 40 நாடாளுமன்ற தொகுதியிலுள்ள மக்க ளின் தேவைகள் குறித்த கையேட்டை சேலத் தில் மாணவர்கள் வெளியிட்டனர். கட்சி சார்பற்ற மாணவர்கள் தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகளிலும் மக்களின் தேவை கள் என்னென்ன என நேரடியாக கேட்டு கண்ட றிந்து அது குறித்து கையேடு ஒன்றை தயா ரித்துள்ளனர். அந்தக் கையேட்டை சேலம் ஒய்எம்சிஏ அரங்கத்தில் பத்திரிக்கையாளர் கள் முன்னிலையில் வெளியிட்டு செய்தியா ளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், 40 தொகுதியிலும் தங்கள் குழுக்கள் நேரடியாக சென்று கள ஆய்வு மேற்கொண்டதாகவும், இதில் மக்களின் தேவைகள் மற்றும் அடிப் படை பயன்பாடு குறித்து ஆராய்ச்சி மேற் கொண்டதாகவும், அதனை அடிப்படையா கக் கொண்டு இந்த கையேடு தயாரித்த தாகவும் தெரிவித்தனர். அந்த கையேட்டில் கல்வி, மருத்துவம் இலவசமாக வழங்கப்பட வேண்டும். அரசு தேர்வுகளை அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்க வேண் டும் என வலியுறுத்தப்பட்டுள்ளன.
தபால் வாக்குச்சாவடியில் ஆட்சியர் ஆய்வு
தபால் வாக்குச்சாவடியில் ஆட்சியர் ஆய்வு சேலம், ஏப்.15- வரும் ஏப்.19 ஆம் தேதி மக்களவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. தேர்தல் தொடர்பான பணிகளில் அனைத்துத்துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிலையிலான அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, வாக்குச் சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு ஏற்க னவே அவர்களுக்கான பயிற்சி நடைபெற்ற மையங்களில் தங்களது தபால் வாக்குகளைச் செலுத்த வழிவகை செய்யப் பட்டிருந்தது. அதேபோல், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கும் சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையங்கள் கடந்த ஏப்.11,12 ஆகிய இரண்டு நாட்கள் தங்க ளது வாக்கினைச் செலுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தது. அந்தவகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலு வலர்கள் தங்களது தபால் வாக்கினைச் செலுத்தும் வகை யில், திங்களன்று சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையம் மாவட்ட ஆட்சியரகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இச்சிறப்பு வாக்குச்சாவடி மையத்தில் சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களது தபால் வாக்கி னைச் செலுத்தினர். இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ரா.பிருந்தாதேவி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.
வாக்குச்சாவடிகளுக்கு பொருட்கள் தயார்
சேலம், ஏப்.15- தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக் கான வாக்குப்பதிவு, ஏப்.19 ஆம் தேதி நடக்க வுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு கள் தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் அடங்கிய ேலட் பேப்பர் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாக்குப்பதிவு நாளன்று, வாக்குச்சாவடி களில் பயன்படுத்தக்கூடிய பொருட்கள், சம் பந்தப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவ லர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனை ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக் கும் தயார் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து சேலம் மாவட்டத் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 3,260 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத் தப்படும் முத்திரைகள், பென்சில்கள், பேனாக் கள், A4 தாள்கள், மெழுகுவர்த்திகள் உள் ளிட்ட 34 வகையான பொருட்கள், சென்னை யில் இருந்து வரப்பெற்று ஏற்கனவே அந்தந்த சட்டமன்ற தொகுதிகள் வாரியாக பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது அங்கிருந்து ஒவ்வொரு வாக் குச்சாவடிகளுக்கும் தனியாக பொருட்களை பிரித்து வைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அத்துடன், வாக்குச்சாவடிகளில் ஒட்டவேண்டிய வேட்பாளர் விவரம், வழி காட்டி தகவல்கள் அடங்கிய சுவரொட்டிகள், பாதுகாப்பு அட்டைகள் உள்ளிட்டவை வர வுள்ளது. இவை முழுமையாக வந்தவுடன், தனித்தனியாக பிரித்து வைக்கப்படும். பின்னர் தேர்தலுக்கு முதல்நாள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் சேர்த்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும், என்றனர்.
வாக்குப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை வழங்காத நிறுவனம் மீது சிபிஎம் புகார்
திருப்பூர், ஏப்.15- தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு சம்பளத்துடன் விடு முறை வழங்காத தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிறுவ னம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் திங்களன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு திருப்பூர் மாவட் டம், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சட்ட மன்றத் தொகுதி மூலனூர் பேரூராட்சி பகுதியில் ஜே.டபிள்யு என்ற காற்றாலை நிறுவனம் இயங்கி வருகிறது. அதில் பணி செய்யக்கூடிய தொழிலாளிகளுக்கு வரக்கூடிய 19ஆம் தேதி வாக்களிப்பதற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை இன்று வரை அளிக்கப்படவில்லை. இதே போல் பல காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களிலும் வாக்குப்பதிவு நாள் அன்று சம்ப ளத்துடன் கூடிய விடுப்பு வழங்குவது குறித்து அறிவிப்பு செய்யப்படவில்லை. இதுகுறித்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான, கோட்டாட்சியரிடம் புகார் செய்ய தொலைபே சியில் தொடர்பு கொண்டு எடுக்கவில்லை. அத்துடன் இந்த புகார் தெரிவிக்க, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போதும் இணைப்பு கிடைக்க வில்லை. எனவே, தலைமை தேர்தல் ஆணையர் இதுகுறித்து விசாரித்து வரக்கூடிய 19ஆம் தேதி வாக்களிப்பதற்கு அனைத்து தனியார் நிறுவனங்களிலும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை தொழிலாளிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டு கொள்வதாக கடிதம் அனுப்பியுள்ளார்.
பல்லடம் படுகொலை வழக்கு: 4 பேருக்கு ஆயுள் தண்டனை - ஒருவருக்கு 6ஆண்டு சிறை
திருப்பூர், ஏப்.15- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குடும்ப உறவினர்கள் நான்கு பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்ற வாளிகள் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஆறு வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், கள்ளக்கிணறு அருகில் குரைதோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன் ராஜ் (45). அவரது தாய் புஷ்பவதி (67). அத்தை ரத்தினம்மாள் (58). பெரியப்பா மகன் செந்தில்குமார் (47) ஆகியோர் கடந்த ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி இரவு கோரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலை சம்ப வம் இந்த வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. தங்களது தோட்டத்திற்கு செல்லும் பாதையில் சிலர் மது அருந்தியதால், மோகன்ராஜ் குடும்பத்தார் அதை தட்டி கேட்டனர். இந்தப் பின்னணியில் நான்கு பேரும் படுகொலை செய்யப்பட்டனர். இதை யடுத்து காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்த னர். இந்த கொலை தொடர்பாக, செல்லமுத்து (24), ஐயப்பன் (52), ராஜ்குமார் (27), சோனை முத்தையா (30) மற்றும் வெங்கடேஷ் (29) ஆகிய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் ஐந்து பேரும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டனர். இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக குட்டி என்கின்ற வெங்கடேஷ் என்பவனை போலீசார் கால் முட்டியில் சுட்டுப் பிடித்தனர். குட்டி என்கின்ற வெங்க டேஷ் கோவையில் அரசு மருத்துவமனை யில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சையில் இருந்து வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த, காவல் துறையினர் 800 பக்கத் திற்கு திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இந்நிலையில் திங்களன்று திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் கள்ளக்கிணறு கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றவாளிகள் ராஜ்குமார், சோனைமுத் தையா, செல்லமுத்து, ஐய்யப்பன் ஆகிய நான்கு பேருக்கும் தலா 4 ஆயுள் தண்ட னையும், வெங்கடேஷ் (எ) செல்வத்துக்கு இரண்டு, 3 ஆண்டு கடுங்காவல் தண்ட னையும் விதிக்கப்பட்டது.
திருப்பூர் ஏப்.15-
உருப்படியா இருந்த ஒரு ஊரையும் சீரழித்த பாஜக
திருப்பூரில் மநீம தலைவர் கமலஹாசன் பேச்சு
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளராக கே.சுப்பராயன் போட்டியிடுகிறார். அவருக்கு கதிர் அரி வாள் சின்னத்தில் வாக்குகள் சேகரித்து ஞாயிறன்று இரவு திருப்பூர் பாண்டியன் நகரில் மக்கள் நீதி மையம் தலைவர் கமல் ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப் போது அவர் பேசியதாவது: பரப்புரைக்கு நான் வந்ததற்கான காரணம், நாடு காக் கும் தருணம் என்பதால் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவை களை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப் பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி, பெட்ரோல் விலை உயர்வு காரணம். இந்த மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுக ளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டித் தரும் திருப்பூரை ஒழுங் காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரம் எப்படி பிரதமர் உருவாக்கு வார். மக்கள் நலனே குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்ப லாம். செய்யாததை சொல்வதும், செய்வ தாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்பக்கூடாது. கலைஞர் சொல்வதை செய் பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவ தற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். ஒன்றிய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பிக்கு ரூ.5 கோடி கொடுப்பார் கள். இங்கு 6 தொகுதி. 6 தொகுதிக்கு குறைந்தபட்சம் ஒரு கோடி கூட கிடை யாது. அதற்கும் ஜி.எஸ்.டி போடுவது ஒன் றிய அரசு. ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன். ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பா ரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்க லாம். ஜி.எஸ்.டி வேண்டாம் என முழங்கி யவர்களில் நானும் ஒருவன். ஜிஎஸ்டி மற் றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட ஒன்றிய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சு விலை உயர்வு நூல் தட்டுப் பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அள வில் முதல் இடத்தை நெருங்கி கொண்டி ருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங் களாதேசில் இருந்து நூல், துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதார ணம் போதும். ஒன்றிய அரசு என சொன்னா லும் இது மக்களுடன் ஒன்றாத அரசு. எனக் கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன்.இவ்வாறு அவர் பேசி னார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், க. செல்வராஜ் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.
தமிழக ஜவுளித்துறையை சீரழித்த பாஜக பெண் தொழில்முனைவோரின் வாக்குமூலம்
சமூக வலைத்தளங்களில் ஒரு காணொளி வைரலாகி வருகிறது. கொங்குத்தமிழில் உண்மையை உரக் கப்பேசும் அந்த பெண்மணி ஈரோட்டை சேர்ந்தவர். ஜவுளித்துறை சார்ந்த தொழில்முனைவோர். எந்த அரசியலை யும் சாராமல் எதார்த்தமாக அவர் பேசு கிற கானொலியில்..தமிழக ஜவுளித் துறை சந்திக்கும் நெருக்கடிகளை வெகு இயல்பாக பேசியது தற்போது ஜவுளித் துறை வட்டாரங்களில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பரவலாக பகிரப் படுவது பாஜகவின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டுகிறது. அவர் என்ன பேசுகிறார்…”மதம் முக்கியமில்லை; மாற்றம் முக்கிய மில்லை என்று சொல்லிவிட்டு, இப் போது நாங்களெல்லாம் எலைட். ஒரு மாற்றம் வேண்டும். அந்த மாற்றத்தை கொண்டு வரும் பாஜகவிற்குதான் நாங் கள் ஆதரவு அளிப்போம் என்று கூறும் ஈரோடு, கரூர், கோவை, திருப்பூரிலுள்ள தொழிலதிபர்களின் கவனத்திற்கு… ஒரு காலத்தில் கைத்தறியில் நம் ஊர் நூலில் நெய்த ஒரு சேலையை 500 ரூபாய் கொடுத்து வாங்கினோம். அதே போல் பேன்ஸி சேலைகளை ஆயிரத்து 300 ரூபாய் வரை கொடுத்து வாங்கி னோம். தற்போது, அது தலைகீழாக மாறி, பேன்ஸி சேலையை 800 ரூபாய்க் கும் கீழே வாங்கிட முடியும். ஆனால், நம் ஊர் சேலையை 3 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்தாலும் வாங்க முடி யாது. இதற்கு காரணம் என்னவென் றால், நம் ஊர் பருத்தி நூலுக்கு எவ்வ ளவு விலை ஏத்த முடியுமோ ஏத்தி விட்டு, என்னனென்ன வரிகளை போட முடியுமோ அத்தனை வரிகளை போட்டு விட்டு, தமிழ்நாட்டு பருத்தி நூல் சேலை களின் உற்பத்தியை கீழே இறக்கிவிட் டனர். அடுத்து, குஜராத்-தின் செயற்கை நூலுக்கான விலை குறைத்து, பேன்ஸி சேலைகளின் உற்பத்தியை அதிகரித்து விட்டனர். பேன்ஸி சேலைகளை அனைத்து இடங்களிலும் மலிவான விலையில் விற்பனை செய்யும் நிலைக்கு கொண்டு வந்து, இதன்மூலம் நம்ம ஊர் சேலை களை முற்றிலும் அழித்துவிட்டனர். இதற்கு பின்னரும் நாங்கள் மோடி அர சுக்கு தான் ஆதரவு அளிப்போம் என்றுக் கூறினால், தமிழ்நாட்டிலிருந்து குறிப் பாக ஈரோடு, கரூர், கோவை, திருப்பூரி லிருந்து வடமாநிலங்களுக்கு நடந்தே வேலைக்காக ஒரு மிகப்பெரிய ரோடு ஷோ நடத்தக்கூடிய தலைமுறையை உருவாக்கக்கூடிய பாவம் நம்மை வந்து சேரும்”. என்கிறார்.
மாற்றுத்திறனாளிகள் வாக்குசேகரிப்பு
திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதர வாக மாற்றுத்திறனாளிகள் அமைப்பி னர் பவானிசாகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பவானிசாகர் சட்டமன்றத் தொகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற் றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங் கத்தின் மாவட்ட உதவிச்செயலாளர் ஆர். ரமேஷ் மற்றும் சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்ட உதவித்தலைவர் டி.சுப்பிர மணி தலைமையில் பவானி சாகரில் மக்க ளிடம் வீடு வீடாகச் சென்று, துண்டறிக்கை வழங்கி வாக்கு சேகரித்தனர்.