திருப்பூர் ஜூலை 10- திருப்பூர் ஜெய்வாபாய் முன்மா திரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் பள்ளி மேலாண்மைக்குழு மறுகூட்டமைப்பு கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. பின்னர் பள்ளி மேலாண்மை குழு உறுப்பி னர்களின் தேர்தல் நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை யாசிரியை ஸ்டெல்லா அமலோற் பவ மேரி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் கணேசன் தேர்தல் பார்வையாளராக கலந்துகொண்டு கண்காணித்தார். மாவட்ட வேளாண்துறை அதிகாரி ஈஸ்வர மூர்த்தி தேர்தல் பார்வையாளராக செயல்பட்டார்.பள்ளி மேலாண் மைக்குழு குறித்து பெற்றோர்க ளுக்கு விரிவாக எடுத்துக்கூறப் பட்டது. இதனைத்தொடர்ந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு, 9 முதல் 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பிளஸ் 2 ஆகிய வகுப்புகளாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடந்தது. இதில் போட்டி யிட விருப்பம் உள்ளவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டு அவர் கள் தங்களைப் பற்றிய விபரங்க ளையும், குழுவில் உறுப்பினரா னால் என்ன செய்வோம் என்பது குறித்தும் கூறினார்கள். இதனைய டுத்து நடந்த உறுப்பினர்கள் தேர்த லில் தலைமையாசிரியை ஸ்டெல்லா அமலோற்பவ மேரி உறுப்பினர் மற்றும் கூட்ட அழைப் பாளராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து உறுப்பினர்களாக சாயிதா பானு, பத்மபிரியா, முத்த மிழ்செல்வன், கிருஷ்ணமூர்த்தி, அய்யப்பன், சஃபியுல்லா, விமலா, சுதா, ஹேமலதா, தேன்மொழி, சாந்தி, மகேஸ்வரி, ரத்னா ஆகி யோர் பெற்றோர் பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டனர்.
அதே போல் உள்ளாட்சி பிரதிநிதிகள் சார் பில் துணை மேயர் பாலசுப்ரமணி யம், கவுன்சிலர் திவாகரன், ஆசிரி யர் பிரதிநிதியாக ஆசிரியை சர் வேஸ்வரி, தன்னார்வ அமைப்பின் சார்பில் நீலவேணியும் மற்றும் மக ளிர் சுய உதவிகுழு சார்பில் உறுப்பி னராக கவிதா தேவி என 20 பேர்கள் கொண்ட குழுவினர் தேர்வு செய் யப்பட்டனர். இதனையடுத்து நடந்த தலை வர், துணைத்தலைவர் தேர்தலில் தலைவராக மகேஸ்வரியும், துணைத்தலைவராக ரத்னாவும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட னர். பின்னர் உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு பள்ளி வளாகத்தில் முதல் கூட்டம் நடந் தது. இதில் அரசு சார்பில் ஆசிரியர் கள் நியமிக்கும் வரை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலமும், பள்ளி மேலாண்மை குழு மூலமும் தற்காலிக ஆசிரியர்களை நிய மித்து மாணவர்களின் கல்வி மேம் பாட்டிற்கான செயல்கள் முன்னெ டுப்பது என முதல் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. அடுத்த கூட்டம் வருகிற 15 ஆம் தேதி ( வெள்ளிக்கி ழமை) நடக்க உள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது. பின்னர் பள்ளி மேலாண்மைக்குழுவின் முதல் நிகழ்ச்சியாக பள்ளி வளாகத்தில் தலைவர் மகேஸ்வரி தலைமை யில் மரம் நடப்பட்டது.