திருப்பூர், செப். 25 - ஆரம்ப கல்வி முதல் பல்கலைக் கழகம் வரை மாணவர்களின் கற்றல் செயல்பாட்டை ஒழித்துக் கட்டுவதே தேசிய கல்விக் கொள்கையின் நோக் கமாக உள்ளது. எனவே தேசிய கல் விக் கொள்கை 2020-ஐ முற்றாக நிரா கரிக்க வேண்டும் என்று பொதுக் கல் விக்கான மாநில மேடை பொதுச் செய லாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறி னார். திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நமக்கான இந்தியாவை நோக்கி என்ற தலைப் பில் 10 நாள் காலை நேரத் தொடர் வகுப்பு கடந்த வியாழக்கிழமை தொடங்கியது. திங்களன்று நான் காம் நாள் அமர்வில் தேசிய கல்விக் கொள்கை: கார்ப்ரேட்மயமும், காவி மயமும் என்ற பொருளில் பொதுக் கல்விக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கல்வி என்பது பள்ளிக்கூடத்தில் தொடங்குவதில்லை. குழந்தை பிறந்து வீட்டில் வளரும்போதே ஏன், எதற்கு என்று கேள்வி கேட்கத் தொடங்குவதில் இருந்தே கல்வி தொடங்குகிறது. ஹோமோ சேப்பி யன்ஸ் இனத்தில் இருந்து மனிதர்கள் உருவானபோதே கற்றல் செயல்பாடு தொடங்கி விட்டது.
கற்றல் செயல் பாட்டின் மூலம் தான் மனிதர்கள் உரு வானார்கள். சிந்தனை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி ஏற்பட்டது. ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை அத்தகைய கற் றல் செயல்பாட்டுக்கு உகந்ததாக இருக்கிறதா? நாடு விடுதலை பெற்ற பின் கல்வி கொள்கை குறித்து ஆராய்வதற்கு முதலில் அமைக்கப்பட்ட கோத்தாரி கமிஷன் விடுதலைப் போராட்ட கால எதிர்பார்ப்பு, விருப்பங்களை நிறை வேற்றக்கூடியதாக அறிக்கை சமர்ப் பித்தது. அதில் விமர்சனத்துக்குரிய அம்சங்கள் குறைவாக இருந்தன. பொதுப் பள்ளி, அருகாமைப் பள்ளி குறித்து ஆய்வு செய்த அக்குழு பொதுக் கல்வி முறையை அமலாக்க பரிந்துரைத்தது. அதற்குப் பிறகு அவ சர நிலை காலத்தில் மாநிலப் பட்டிய லில் இருந்த கல்வி பொதுப் பட்டிய லுக்கு மாற்றப்பட்டது. 1986ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கை கோத்தாரி கமிஷன் பரிந்து ரையை விட கடும் விமர்சனங்க ளுக்கு உரியதாக இருந்தது. 1968, 1986 கல்விக் கொள்கைகள் விமர்ச னங்களுக்கு உரியவையாக இருந் தாலும், அதில் ஏற்கத்தக்க அம்சங்க ளும் இருந்தன. ஆனால் தற்போது ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் தேசிய கல்விக் கொள்கை மிகவும் மோசமானது. இது விமர்சனத்துக்கு உரியது என்று மட்டும் சொல்ல முடி யாது. முழுமையாக நிராகரிக்க வேண்டியதாகும். குழந்தைகள், மாணவர்களின் கற் றல் செயல்பாட்டை தேசிய கல்விக் கொள்கைப் புறக்கணிக்கிறது. 3, 5, 8ஆம் வகுப்புகளுக்குத் பொதுத் தேர்வு, அவர்களுக்குத் தொழிற் பயிற்சி அளிக்கப்படும் என்பது அவர் கள் சிறந்த கல்வியைப் பெறவிடாமல் தடுப்பதுடன், அரைகுறை திறன் பெற்ற தொழிலாளர்களாக உருவாக்கக்கூடியதாகும். பள்ளி கல் வியை முடித்த பிறகு பட்டப் படிப்பு படிக்க வேண்டுமென்றால் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (க்யூட்) எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
அத்துடன் 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொரோனா பரவல் காரணமாக சுகா தார அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட சூழலில், யாரும் வெளியே வந்து போராட முடியாது என்ற நிலையில், கல்லூரி கல்வியை டிஜிட்டல் முறை யில் கற்பிப்பதாக இருக்கும் என மாற் றியுள்ளனர். இதன் மூலம் வகுப்பறை யில் மாணவர்கள், ஆசிரியர்கள் கூடு வது என்பது தடுக்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கை சந் தைக்கு ஏற்ற மனிதர்களை தயார்ப் படுத்தக் கூடியதாகவும், வர்ணாசிரம அடிப்படையில் வசதி படைத்த, குறிப்பிட்ட சிலர் மட்டுமே உயர் கல்வி பெறக்கூடியவர்களாகவும், மற்றவர்கள் அந்த கல்வியை பெற முடியாதவர்களாகவும் மாற்றக்கூடி யதாக உள்ளது. எனவே தேசிய கல் விக் கொள்கை 2020-ஐ முழுமையாக நிராகரிக்க வேண்டும். இந்த கல்விக் கொள்கையின் ஆபத்துகளை பொது இடங்களில், மக்களிடம், வீடு களில், நம் குடும்பத்தினரிடம் என அனைவரிடமும் பேச வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்க ளிக்கடியவர்கள் இந்த ஆபத்துகளை உணர்ந்து தேசிய கல்விக் கொள் கையை நிராகரிக்க, மோடி அரசை தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறினார். இந்த அமர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ஆர்.குமார் தலைமை ஏற்றார். இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளில் இருந்து பெருந்தி ரளானோர் கலந்து கொண்டனர்.