171 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து
சேலம், ஆக.21- போக்குவரத்து விதிகளை மீறியதாக 171 பேரின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவ டிக்கை எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து காவல் துறையினர் பல்வேறு நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சாலை விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமத்தை தற் காலிகமாக ரத்து செய்யவும் பரிந்துரை செய்து வரு கின்றனர். அதன்படி சேலம் சரகத்தில் சேலம், தருமபுரி மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் அதி வேகமாக வாகனம் ஓட்டிய 40 பேர், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி வந்த 37 ஓட்டுநர்கள், சிக்னலை மீறி வாகனங்களை இயக்கிய 21 பேர், கைப்பேசி பேசியபடி வாகனம் ஓட்டிய 37 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற் படுத்திய 35 ஓட்டுநர்கள் உட்பட 171 பேரின் ஓட்டுநர் உரிமங்களை தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு காவல் துறையினர் பரிந்துரை செய்தனர். அதன்பேரில், 171 பேரின் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப் பட்டுள்ளது. சேலம் சரகத்தில் போக்குவரத்து விதிமுறை களை மீறி வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களின் உரி மம் ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர, பர்மிட், தகுதிச்சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால், அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போக்கு வரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இன்று தருமபுரியில் கல்விக்கடன் முகாம்
தருமபுரி, ஆக.21- நல்லம்பள்ளி, ஸ்ரீவிஜய் வித்யாலயா கலை, அறி வியல் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று (இன்று) கல்விக்கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நல்லம்பள்ளி ஸ்ரீவிஜய் வித்யாலயா கலை, அறிவியல் கல்லூரி வளா கத்தில் வியாழனன்று காலை 10 மணி முதல் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் வங்கியா ளர்களும், அரசு அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். கல்விக்கடன் பெற தற்போது கல்லூரியில் படித்து வரும் தருமபுரி மாவட்ட இளநிலை, முதுநிலை முதலாமாண்டு முதல் இறுதியாண்டு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். தருமபுரி மாவட்டத்தை சொந்த ஊராகக் கொண்டு வெளி மாவட்டத்தில், மாநிலத்தில் பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், நர்சிங், பார்மஸி, கலை, அறிவியல், கல்வி யியல் படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கூடு தல் விவரங்களுக்கு முன்னோடி வங்கி மேலாளர், இந்தி யன் வங்கி, தருமபுரி, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, ஒட்டப்பட்டி, தருமபுரி அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது 89255 33941, 89255 33942, 04342- 230892 ஆகிய எண் களிலோ தொடா்பு கொண்டு பயன்பெறலாம், என தெரி விக்கப்பட்டுள்ளது.
தெருநாய் கடித்து பள்ளி மாணவி காயம்
சேலம், ஆக.21- சங்ககிரி அருகே அரசுப்பள்ளி வளாகத்தில், நாய் கடித்ததில் காயமடைந்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள நட்டு வம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், சங்ககிரி, புள்ளிபாளை யம் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் - சத்யா தம்பதி யினரின் மகள் ஹரிணி, 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் செவ்வாயன்று காலை பள்ளிக்கு சென்றபோது, பள்ளியின் வளாகத்தில் சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து மாணவியை குதறியது. இதனையறிந்த ஆசிரியர்கள் பாதிக் கப்பட்ட மாணவியை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவம னையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மாண விக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்ப வம் குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் கூறுகையில், நட்டுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்திலேயே தெருநாய்கள் சுற்றி திரிகின்றன. மாணவ, மாணவிகளின் பாதுகாப்புக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
பள்ளிபாளையம்: குறுகலான இடத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
நாமக்கல், ஆக.21- மிகக் குறுகலான கோவில் மண்டபத்தில் மக்க ளுடன் முதல்வர் திட்ட முகாம் அமைக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - திருச் செங்கோடு சாலை காடச்சநல்லூர் அடுத்துள்ள, ஐந்து பனை என்ற பகுதியில் காடச்சநல்லூர் ஊராட்சி, ஓடப் பள்ளி அக்ரஹாரம் ஊராட்சிக்கு மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் செவ்வாயன்று நடைபெற்றது. இதில் மின் சார வாரியம், சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஊரக வளர்ச்சித்துறை, மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை என 15 க்கும் மேற்பட்ட அரசு அரசுத் துறைகளின் சார்பில் முகாம் அமைக்கப்பட்டி ருந்தது. இம்முகாமில், ஆதார் சேவைகள், பட்டா மாறுதல், வங்கி கணக்கு துவங்குதல், உள்ளிட்ட தேவைகளுக் காக சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான மக்கள் இந்த முகாமில் குவிந்தனர். மிகக் குறுகலான கோவில் மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டதால் பொது மக்கள் அவதிக்குள்ளாகினர். பொதுமக்கள் முகாமிற்கு வெளியே சாமியான பந்தலில் தங்க வைக்கப்பட்டு. பின்னர் டோக்கன் வழங்கப்பட்டு, பிறகு உள்ளே அனுப்பப்பட்டனர். மக்களுடன் முதல்வர் முகாமானது பொதுமக்களின் சேவைகளுக்காக அமைக்கப்படுவது. ஆனால் மிகவும் குறுகலான இடத்தில் அமைக்கப்பட்ட தால், பொதுமக்கள் இட நெருக்கடி காரணமாக உரிய அதிகாரிகளை சந்தித்து மனு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுபோன்ற முகாம்களை விசாலமான இடத்தில், பொதுமக்களுக்கு தேவையான முன்னேற்பாடு வசதிக ளோடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள்
சேலம், ஆக.21- சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளி லும் 2025 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணி கள் செவ்வாயன்று துவங்கியது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, 1.1.2025ஐ தகுதி ஏற்பு நாளாகக் கொண்டு, சேலம் மாவட்டத்திற்குட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளிலும் 2025 ஆம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் வீட்டுக்கு வீடு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் பணி நடைபெறும். பின்னர் வாக்குச்சாவடிகளை திருத்தி அமைத்தல், வாக்காளர் புகைப்பட அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் போன்ற பணிகள் செவ்வாயன்று முதல் அக்டோபர் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஒருங்கி ணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 29 ஆம் தேதி வெளியிடப்பட்டு, அன்று முதல் நவம்பர் 28 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி வெளி யிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி நிறுவனங்களின் நெருக்கடி: பெண் தூக்கிட்டு தற்கொலை
நாமக்கல், ஆக.21- பள்ளிபாளையத்தில் நிதி நிறு வனங்கள் நெருக்கடியால் வீடியோ வெளியிட்டு பெண் தூக்கிட்டு தற் கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் அப்பகுதியில் உள்ள ஆறு மக ளிர் குழுக்களுக்கு தலைவியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மகளிர் குழுவிலுள்ள பெண்களுக்கு சுய உதவிக் கடன்கள், மைக்ரோ பைனான்ஸ், மற்றும் வெளிப்பகுதி களில் பெற்றுதந்துள்ளார். இதில் கடன் வாங்கிய சில பெண்கள் தலை மறைவு ஆகிவிட்டனர். இதன் காரண மாக கடன் பெற்று கொடுத்த சுஜாதா தான் கடனை திருப்பி செலுத்த வேண் டும் என மைக்ரோ பைனான்ஸ் நிறுவ னங்களும், தனியார் நிதி நிறுவனங்க ளும் தொடர்ந்து அழுத்தம் கொடுத் துள்ளது. இந்த கடன்களை செலுத்த மேலும் நிதி நிறுவனங்களில் கடன் வாங்கியுள்ளார். இவற்றை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலையில், மைக்ரோ பைனான்ஸ் நிர்வாகிகளும், நிதி நிறுவன உரிமையாளர்களும் சுஜாதா மற்றும் அவர் குடும்பத்தி னரை தகாத வார்த்தைகளாலும் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், செவ்வாயன்று தனது உறவினர் ஒருவர் உடல் நலம் பாதிக் கப்பட்டுள்ளதால் நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வருவதற்காக ஈரோடு அருகே உள்ள சோலார் என்ற ஊருக்கு சுஜாதா சென்று விட்டார். இதை தவறாக புரிந்து கொண்ட அருகில் வசிக்கும் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் பெண்மணி ஒரு வர், சுஜாதா ஊரை விட்டு ஓடி விட்ட தாக கூறி, சுஜாதாவின் மகன் தனு சுவை தகாத வார்த்தைகளில் பேசி யுள்ளார். இந்நிலையில், செவ்வாயன்று இரவு வீட்டுக்கு வந்த சுஜாதாவை கவிதா என்பவர், தகாத வார்த்தை களால் பேசி திட்டியதால் மனமு டைந்த சுஜாதா வீடியோ பதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண் டார். இது குறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப் பற்றி பிரதே பரிசோதனைக்காக, பள்ளிபாளையம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். சுஜாதா வின் இறப்பு குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனி டையே, சுஜாதாவின் தற்கொலைக்கு காரணமான கவிதாவை கைது செய்ய வேண்டும். மற்றவர்கள் மீதும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி காவல் நிலையம் முன்பு அவரது உற வினர்கள் குவிந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.
திருப்பூரில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்
திருப்பூர், ஆக.21- மாநகரப் பகுதிகளில் குண்டும் குழியுமாக காணப்படும் சாலைகளை சீரமைப்பது, முறையான மழைநீர் வடிகால் அமைப்பது உள்ளிட்ட பணிகளை உடனடியாக செய்யா விட்டால், மாநில நெடுஞ்சாலை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர, மாநகர, ஒன்றியச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தியாகி பழனிச்சாமி நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் இடைக்கமிட்டி செயலாளர்கள் கூட்டம் புதனன்று மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண் டாமை ஒழிப்பு முன்னணியின் தொடர் போராட்டத்தின் விளைவாக பெறப்பட்ட அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு மனதார வரவேற்கிறது. வரும் 29 ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் திண்டுக்கல்லில் நடைபெ றும் அருந்ததியர் சிறப்பு மாநாட்டை திருப்பூர் மாவட்டம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் நூற்றுக்கணக்கான இடங்களில் பிரச்சார இயக்கம் நடத்துவது. மாநாட்டிற்கு திருப்பூரில் இருந்து ஆயிரக் கணக்கானோரை திரட்டுவது என முடிவெடுக் கப்பட்டுள்ளது. அதேபோல் மாநகரப் பகுதிகளில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படு கிறது. சாலைகள் பழுதடைந்துள்ளதாலும், மழைக்காலங்களில் சாலைகளில் நீர் தேங்கி நிற்பதாலும், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். முறையான மழை நீர் வடிகால் இல்லாத தால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப் புகளுக்குள் மழை நீருடன் கழிவுநீர் கலந்து சென்று விடுகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். உடனடியாக மாநில நெடுஞ்சாலைத் துறை தேசிய நெடுஞ் சாலைத் துறை மாநகராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லா விட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் மாநில நெடுஞ்சாலை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், மாநிலக்குழு உறுப்பி னர் கே.சுகந்தி, மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் ஆகியோர் உரையாற்றி னர். இதில், நகர, மாநகர, ஒன்றியச் செயலா ளர்கள் பங்கேற்றனர்.
முறையாக குடிநீர் வழங்க சிபிஎம் வலியுறுத்தல்
முறையாக குடிநீர் வழங்க சிபிஎம் வலியுறுத்தல் திருப்பூர், ஆக.21- தாராபுரம் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாராபுரம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் 12, 13 ஆகிய வார்டு பகுதிகளில் குடிநீர் சரிவர வருவதில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ள னர். ஆற்றுப்பகுதியில் தண்ணீர் ஏராளமாக சென்று கொண்டி ருக்கிறது. அதை எடுத்து முறையாக விநியோகம் செய்யும் பணியை நகராட்சி பொறியியல் துறை சரிவர செய்வதில்லை. ஏதாவது ஒரு காரணத்தை மட்டுமே சொல்கிறார்கள். மேலும், குடிநீர் சரியாக விநியோகிக்க எந்தவிதமான முன் முயற்சி நட வடிக்கையும் இல்லை. இது குறித்து முறையாக பரிசீ லித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறப் பட்டுள்ளது.
கீழ்பவானி சீரமைப்பு – முதலமைச்சர் தலையிட விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்
ஈரோடு, ஆக. 21- கீழ்பவானி சீரமைப்பு வேலைகள் முறை யாக நடைபெறவில்லை என கீழ்பவானி முறை நீர்ப்பாசன விவசாயிகள் கூட்டமைப் பினர் புகார் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட கோரிக்கை வைத் துள்ளனர். இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வழியாக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது, நீரா தாரங்களைப் பாதுகாப்பதிலும், பாசனக் கட் டுமானங்களை பாதுகாப்பதிலும் கலைஞர் அரசு முன்மாதிரியாக இருந்தது. கடந்த 2009ல் திட்டமிடப்பட்ட கீழ்பவானி சீரமைக்கும் வேலைகள் பல்வேறு அரசியல் காரணங்க ளால் தடைப்பட்டது. இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டு. 57ஆவது மைல் சென்ற நிலையில், 47ஆவது மைலில் உள்ள மழைநீர் வடிகால் பாலம் உடைப்பு ஏற் பட்டது. விவசாயிகள் வேலைகளைத் தொடர்ந்து நடத்த நாற்று விடுவதற்குத் தயா ரான நிலையில் அணை மூடப்பட்டு விட் டது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. செயலிழந்து போன கட்டுமானங்களை புதுப்பிக்கும் பணி யில் தடையை ஏற்படுத்தி வருகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சுயநல சக்திகளின் அரசியல் செல்வாக்கால் தடுப்பதும், அந்த இடம் மண் கொண்டு மூடுவ தும் வாடிக்கையாகி வருகிறது. இதனால் பல இடங்களில் கால்வாய் பலமிழந்து வருகிறது. 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி கொடுக் கும் ரத்த நாளம் முறையாக சீரமைக்கப்பட வில்லை. இது உழவர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் தவறான மதிப்பீடு உரு வாகும். இந்த ஆண்டு நெல் சாகுபடிக்கு தண்ணீர் முறையாகக் கிடைக்குமா என்ற அச் சததில் விவசாயிகள் உள்ளனர். அரசின் மீது தவறான மதிப்பீடு உருவாகும். எனவே, முதல மைச்சர் இதுகுறித்து உடனடியாக ஆய்வு செய்து, வல்லுநர்களின் முடிவின்படி கீழ்ப வானி சீரமைப்பு வேலைகளைச் செய்ய வழிகாட்ட வேண்டும் என தெரிவித்துள்ள னர்.
பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதி விபத்து
மேட்டுப்பாளையம், ஆக.21- பள்ளி பேருந்து மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில், ஐந்து மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு தினசரி தனியார் மற்றும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், தனியார் பேருந்துகள் காலை மற்றும் மாலை நேரங்களில் நேரத்தை காரணமாக கூறி அதிவேகமாக இயக்கப்பட்டு வருவதால் தொடர்ந்து மேட்டுப்பாளையம் கோவை சாலையில் விபத்துகள் ஏற்பட்டு வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில், புதனன்று காலை முதல் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்த காரணத்தினால் சாலைகளில் மழை வெள்ளம் சூழ்ந்து இருந்த நிலையில், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து கோவை நோக்கி புறப்பட்ட தனியார் பேருந்தும் காரமடை பகுதியில் செயல்பட்டு வரும் கிறிஸ்து அரசர் பள்ளி மினி பேருந்து மாணவர்களை ஏற்றுக்கொண்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டது. குட்டையூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது பள்ளிப் பேருந்தின் பின்பக்கத்தில் தனியார் பேருந்து மோதியது. இதில், பள்ளி பேருந்தில் பயணம் செய்த மூன்று மாணவர்கள் ஒரு மாணவி மற்றும் தனியார் பேருந்து பயணம் செய்த கல்லூரி மாணவி என ஐந்து பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியிலிருந்து பொதுமக்கள் அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சையளித்து அனுப்பி வைத்தனர்.
தரமான உணவும் ஆரோக்கியமும்
தரமான உணவும் ஆரோக்கியமும் உதகை, ஆக. 21– காலை உணவு திட்டத்தில் உணவு வகைகளின் தரமும், குழந்தைகளின் ஆரோக்கியம் முக்கியம் என, நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள 300க்கு மேற்பட்ட அரசு ஆரம்ப பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதில், குறிப்பாக கூடலுார், பந்தலுார், கோத்தகிரி, குன் னுார் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பள்ளிகளில் ஏராளமான பழங்குடியின மாணவர்கள் பயின்று வருகின்றனர். காலை உணவு திட்டத்தில் இவர்களுக்கான தரமான உணவுகள் சமைத்து வழங்கப்படுகிறா என்பதை மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில் குறைப்பாடு இருந்தால் குறைகளை களைய வேண்டும் என அறிவுறுத்தி னார்.