districts

img

திருமணி முத்தாற்றில் சாயக்கழிவுகள்

நாமக்கல், ஆக. 10- திருமணி முத்தாற்றில் சாயக்கழிவுகள் கலந்து வரு வதால் சூழலியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த மதியம்பட்டி பகு தியில் திருமணிமுத்தாறு  கடந்து செல்கிறது. சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் உற்பத்தியாகும் திருமணி முத்தாறு சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக பாய்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிரா மங்கள் வழியாக சென்று நன்செய் இடையார் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது . இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் வெள்ளியன்று  இரவு 83 சென்டிமீட்டர் மழையும் ஏற்காடு  மலைப்பகுதியில் 121 செண்டி மீட்டர் மழையும் பெய்ததின் காரணமாக திருமணி முற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மதியம்பட்டி சவுரிபாளையம், கல் கட்டனூர், புரசப்பா ளையம் ஆகிய பகுதிகளில் கடந்து செல்லும் திருமணிமுத் தாற்றில் சாக்கடை கழிவுநீர் மற்றும் சாய கழிவுகளும் கலந்ததால், அதிகளவு துர்நாற்றத்துடன் கருப்பு நிறத்தில்  வெள்ள நீர் பாய்ந்தோடி வருகிறது. எனவே இது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியர்கள் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.