districts

img

திருப்பூரில் சாய ஆலை வாயு துர்நாற்றத்தால் பாதிப்பு அனைத்து ஆலைகளையும் ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தல்

திருப்பூர், ஜூன் 9 - திருப்பூர் வெங்கமேடு பகுதியில் செயல்படும் அனைத்து சாய ஆலை களையும் முழுமையாக ஆய்வுக்கு  உட்படுத்தி, பாதுகாப்பு விதிமுறை களை முழுமையாக பின்பற்றுவதை அரசு நிர்வாகம் உத்தரவாதம் செய்ய  வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.  திருப்பூர் வெங்கமேடு பகுதியில்  செயல்படும் தனியார் சாய ஆலை யில் இருந்து துர்நாற்றம் வீசியதைய டுத்து வியாழனன்று அப்பகுதியில் குடியிருக்கும் சிறுவர், சிறுமியருக்கு  வாந்தி, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டு  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டனர். இதன்பின் வெள்ளியன்று  பாதிக்கப்பட்டவர்கள் பொதுப்பிரி வுக்கு மாற்றப்பட்டனர்.  இதையடுத்து அரசு அலுவலர் கள் தனியார் நிறுவனத்தில் ஆய்வு  மேற்கொண்டனர். மேலும் ஆய்வு  முடிவுகள் வரும் வரை நிறுவ னத்தை இயக்க வேண்டாம் என தெரி வித்தனர். இந்நிலையில் அந்த நிறுவ னத்தின் மின் இணைப்பு துண்டிக்கப் பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கையில், வியாழ னன்று மாலை 5 மணி அளவில் துர் நாற்றம் வீசியது. குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டி ருந்தார்கள்.

நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை 7 மணி அளவில் மயங்கி விழுந்துவிட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். அதிகாலை 3 மணி அளவில் குழந்தைகள் ஒவ் வொருவராக வாந்தி எடுத்தும், மூச்சு திணறிக்கொண்டும் இருந் தனர். வாந்தி எடுப்பதை கண்டு உணவு ஏதோ சரியில்லை என்று எண் ணினோம். அருகாமையில் இருந்து  பலர் வந்து, எங்கள் குழந்தைகளும் வாந்தி எடுப்பதாக கூறினர். உடன டியாக இப்பகுதி அதிமுக நிர்வாகி ஒருவருக்கு அழைத்தோம்; அவர் வர வில்லை. அதைத்தொடர்ந்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாலனை தொடர்பு கொண்டோம்; அவர் உடனடியாக வந்தார்.  அதைய டுத்து மற்ற கட்சி நிர்வாகிகள் வந்து  சேர்ந்தனர். இதையடுத்து அனை வரையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம்.

தனியார் நிறுவனத்தின் அருகா மையில் இருந்தவர்கள் கூறியதா வது, ஆறு மாதத்திற்கு முன்பே இது  போல் ஒரு முறை துர்நாற்றம் வீசியது.  பெருமளவில் எதுவும் பாதிப்பு ஏற் படவில்லை. இந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் சில  நேரம் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்று அந்த நிர்வாகத்திடம் கூறி யுள்ளோம். தற்போது வீசிய துர்நாற்றத் திற்கு பிறகு காலையில் பலருக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இன்றும் பலருக்கு வாந்தி வருவ தாகவும், வயிற்று பிரச்சனை ஏற்படு வதாகவும் தெரிவித்தனர். மேலும், இங்கு மருத்துவ முகாம் அமைத்து இப்பகுதி மக்களை பரிசோதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதேசமயம் எங்கள் ஆலையால்  இப்பிரச்சனை ஏற்படவில்லை. அரு காமையில் மாநகராட்சி நிர்வாகம் குப்பையை அகற்றாததுதான் பிரச் சனை என்று ஆலை நிர்வாகத் தரப்பி னர் மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறி யதாகவும், அதைக் கேட்டு மாநக ராட்சி அதிகாரிகளும் அங்கிருந்த குப் பைகளை அள்ளி சுத்தப்படுத்திச் சென்றதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர். 15 ஆண்டுகளுக்கு மேலாக இதே  பகுதியில்தான் நாங்கள் வசித்து வரு கிறோம்.

குப்பை அள்ளப்படாமல் பல நாட்களாக இங்கு குப்பை தேங் கியிருந்திருக்கிறது. குப்பையினால் வாந்தி, மயக்கம் வந்தது என்று ஆலை நிர்வாகம் பிரச்சனையை திசை திருப்புகிறது என்று மக்கள் குற் றஞ்சாட்டினர். மேலும் இந்த பகுதி யில் ஐந்து ஆலைகள் இயங்குகின் றன. எனவே இப்போது நடைபெற் றிருக்கும் ஆலை வாயு துர்நாற்றத் தால் குழந்தைகளுக்கு வாந்தி, மயக் கம், மூச்சுத்திணறல் ஏற்பட்டி ருப்பதை முன்னெச்சரிக்கையாகக் கொண்டு அரசும், மாசு கட்டுப்பாட்டு  வாரியமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  தனியார் ஆலை நிர்வாகங்கள்  மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டு வேறு காரணங்களைச் சொல்லி திசை திருப்புவதை ஏற்க  முடியாது. இங்கிருக்கும் அனைத்து ஆலைகளையும் மாவட்ட நிர்வாகம் முழுமையான தணிக்கைக்கு உட் படுத்த வேண்டும். விதிமுறைகள் அனைத்தும் சரியாக பயன்படுத்தப் படுகின்றனவா என்று பாரபட்சம் இல் லாமல் ஆய்வு செய்ய வேண்டும் என் றும் அப்பகுதி மக்கள் கூறினர்