districts

img

காவிரி ஆற்றில் குப்பை கழிவுகள் வீச்சு சுகாதார சீர்கேடு அபாயம்

 பள்ளிபாளையம், பிப். 23- காவிரி ஆற்றில் குப்பை கழிவுகள் வீசுவதை தடுக்க, அதிகாரிகள் கண்காணிப்பு இல்லாததால், ஆற்று நீர் கழிவு நீராக மாறி சுகாதார சீர்கேடு நிலவுகிறது.  நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தில் காவிரி ஆறு ஓடுகிறது. மேட்டூர் அணையிலிருந்து அதிகபட்ச நீர்  திறக்கப்படும் நாட்களில், வெள்ளப் ப்பெருக்கு ஏற்பட்டு, காவிரி கரையின் இரு  புறமும் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்து  விடும். அந்த அளவிற்கு காவிரி ஆற்றங் கரையை ஒட்டி அதிக அளவில் வீடுகள்  உள்ள பகுதியாகும்.  இந்நிலையில், தற்போது மேட்டூர் அணை யில் திறக்கப்படும் நீரின் அளவு வெகுவாக குறைந்ததாலும், பள்ளிபாளையம் அடுத் துள்ள ஓடப்பள்ளி என்ற பகுதி அருகே உள்ள   தடுப்பணையில், பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால், காவிரி ஆற்று நீர் முழுமை யாக வெளியேற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் நீர் ஏதுமின்றி, வறண்டு பாறைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், பள்ளி பாளையத்திலிருந்து ஈரோடு செல்வோர் ஈரோட்டில் இருந்து பள்ளிபாளையம் வருவோர், உள்ளூர் ஊர் பொதுமக்கள் என பல தரப்பினர் காவிரி ஆற்றை மாசுபடுத்தும், வகையில் குப்பை கழிவுகள் மற்றும் துணி கழிவுகளை காவிரி  ஆற்றில் வீசி செல்கின்றனர். இதன் காரண மாக குப்பைகள் அதிகளவு தேங்கி சுகா தார சீர்கேடு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  மேலும், பள்ளிபாளையம் நகராட்சி சார்பில், ஏற்கனவே காவிரி ஆற்றில் குப்பை  மற்றும் இதர கழிவுகளை கொட்டக்கூடாது என அறிவிப்பு பிளக்ஸ் பேனர் வைக்கப் பட்டுள்ள போதிலும், முறையான கண் காணிப்பு இல்லாத நிலையில், தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நக ராட்சி நிர்வாகம் குப்பை கொட்டும் நபர்களை  கண்காணித்து, அவர்கள் மீது அபராதம் உள் ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக் கின்றனர்.