ஈரோடு, பிப்.11- ஈரோடு மாவட்ட வனப்பகுதியை புலி கள் காப்பகமாக அறிவிக்கும் திட்டத்தை எதிர்த்து அந்தியூர் அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்க லம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அறி விக்கப்பட்ட நிலையில் அந்தியூர், பர்கூர், தட் டக்கரை, சென்னம்பட்டி ஆகிய வனப்பகுதி களைப் புலிகள் காப்பகமாக அறிவிக்கக் கோரும் முன் மொழிவினை ஒன்றிய அர சிற்கு தமிழக வனத்துறை தலைமை வன விலங்கு பாதுகாவலர் அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளள. இந்நிலை யில், பொதுமக்கள் வசிக்கும் பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிப்பதற்கு அந்தி யூர் அடுத்த பர்கூர் வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பர்கூர் ஊராட்சிக்குட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் வியாழனன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், புலிகள் காப்பகமாக அறி விக்கப்பட்டால், எங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் கால்நடைகளின் மேய்ச்சலுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும். வனப் பகுதிக்குள் இருக்கும் நீர்நிலைகளை மக்க ளின் பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதும், வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு செல்ல வும் தடை விதிக்கப்படும். வனத்தில் விளை யும் சிறு மகசூல்களை சேகரிப்பது கூட தடுக் கப்படுவதுடன், மக்கள் வசிக்க தடை விதிக் கப்பட்டு, இங்கிருந்து மலைவாழ் மக்களை வெளியேற்றும் அபாய நிலையும் உண்டா கும். எனவே, புலிகள் காப்பகமாக அறிவிப்ப தற்கு முன் வன உரிமை சட்டம் 2005-ஐ முழு மையாக அமல்படுத்த வேண்டும். மலை வாழ் மக்களின் பாரம்பரிய உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். இப்பகுதி மக்க ளிடம் முறையாகக் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறி னர்.