சேலம், மே 7- மின்சாரம் தாக்கி உயிரிழந்த கட் டிட தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் கிச்சிபாளையம் காந்தி மகான் பகுதியை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி முனியப்பன். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும் 7 மாத பெண் குழந்தை உள்ளது. இந்நிலை யில் கிச்சிப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி காரணமாக சம்பவத்தன்று மின் விநியோகம் மாலை 6 மணிவரை நிறுத் தப்பட்டது. மாலை 6:30 மணி அளவில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட் டது. அப்போது காந்தி மகான் தெரு பகு தியில் உள்ள மின் கம்பியில் உயர் மின் அழுத்தம் காரணமாக திடீரென அவ் வழியாக நடந்து சென்று கொண்டி ருந்த கட்டிட தொழிலாளி முனியப்பன் மீது மின் கம்பி அறுந்து விழுந்தது. இதில், மின்சாரம் தாக்கி முனியப் பன் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். பின்னர், உடலை பிரேத பரிசோதனைக் காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். இந்நிலையில், மின்சாரத்துறை யின் செயல்பாடு காரணமாகவே மின்சா ரம் தாக்கி முனியப்பன் பலியாகியுள்ள தால், இறந்தவர் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என உடலை வாங்க மறுத்து போராட்டத் தில் ஈடுபட்டனர்.