சேலம், ஜன.2- போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்கிற முழக்கத்துடன் ஆங்கில புத்தாண்டை வரவேற்று மாதர் சங் கத்தினர் பேரணி சென்றனர். 2023 ஆம் ஆண்டு வன்முறையில்லா புத்தாண்டை வர வேற்றும், போதையில்லா தமிழகமே வருக, சாதி, மத பேத மில்லாமல் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒன்றினை வோம் என வலியுறுத்தியும், அகில இந்திய 13 வது மாநாடு வெற்றி பெற வலியுறுத்தியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நங்கவள்ளி ஒன்றிய குழு சார்பில் புத்தாண்டு தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கே.ராஜாத்தி, நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கவிதா, ஒன்றிய தலைவர் கார்த்திகா தேவி, சிபிஎம் மாவட்ட செயலா ளர் மேவை.சண்முகராஜா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியாக வந்து பேருந்து நிலையத்தில் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர்.