தருமபுரி, ஏப்.11- இந்தியா கூட்டணியின் தருமபுரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு பொதுமக்கள் உற்சாக வர வேற்பு அளித்து வருகின்ற னர். தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட் டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி, நல் லம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்க ளில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு குழுமியிருந்த பொது மக்கள் அவர் மீது மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து ஆ.மணி பேசுகையில், நல்லம்பள்ளி ஒன்றி யத்தில் நீண்ட ஆண்டுகாலம் அனுபவத் தில் உள்ள விவசாய நிலங்களுக்கும், குடி யிருந்து வரும் வீடுகளுக்கு மனைபட்டா, நிலப்பட்டா பெற்று தருவேன். இப்பகுதி யில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களை நிறை வேற்றுவேன். பொம்மிடி – மிட்டாரெட்டி அள் ளியை இணைக்கும் கோம்பேரி காளிக ரம்பு வழியாக புதிய சாலை அமைக்கப்ப டும் உற வாக்குறுதியளித்தார். இந்நிகழ் வில் திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி, ஒன்றியச் செயலா ளர் கே.பி.மல்லமுத்து, தகவல் தொழில் நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் தருண், பொதுக்குழு உறுப்பினர் நட்ராஜ், முன்னாள் ஒன்றியச் செயலாளர் பி.சி.துரை சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.