கோவை, நவ.16- கொடிசியா தொழில் பூங்காவின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில் நிறுவனங்களை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், குறிச்சி மற்றும் மலுமிச்சம்பட்டி ஆகிய இரண்டு தொழிற்பேட்டைகளில் 99 மேற் படுத்தப்பட்ட தொழில் மனைகள் மற்றும் 271 தொழிற்கூடங்கள் உள்ளன. காளப்பட்டியிலுள்ள மின்னணு மற்றும் மின்னணுவியல் தொழிற் பேட்டை, தொழில் வணிகத்துறை ஆணையரகத்திடம் இருந்து சிட் கோவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில் உள்ள 29 தொழிற்கூடங்கள் அனைத்தும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. இத்தொழிற்பேட்டையில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதி களான தெருவிளக்குகள், சாலைகள், தண்ணீர் விநியோகம் மற்றும் வடி கால் வாய்க்கால் ஆகிய வசதிகள் உள்ளன. குறிச்சி தொழிற்பேட்டையில் தானியங்கி உதிரிபாகங்கள், அச்சு மற்றும் வார்ப்புகள், மோட்டார் மற்றும் பம்பு பாகங்கள், நூற்பு ஆலை பாகங் களும்,
மலுமிச்சம்பட்டி தொழிற் பேட்டையில் காலணிகள், ப்ளாஸ்டிக் நீர் தொட்டிகள், பொறியியல் பாகங்கள், பொறியியல் கட்டுமானமும் மற்றும் காளப்பட்டி தொழிற்பேட்டையில் பொது பொறியியல், ஆட்டோ உதிரி பாகங்கள், காலணிகள், ஆடை இயந்திர உதிரி பாகங்கள், மாவரைக்கும் இயந்திர பாகங்கள் தொடர்பான உற்பத்தி தொழிற் சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் ஆண்கள், 2 ஆயிரத்து 500 பெண்கள் உட்பட மொத்தம் 7 ஆயிரத்து 500 நபர்கள் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளனர். கோவை மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங் களுக்காக தமிழ்நாடு சிட்கோ மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய தனி யார் தொழிற்பேட்டைகள் உருவாக் குதல் திட்டத்தின் கீழ், மேட்டுப் பாளையம், சிறுமுகையில் 13.45 ஏக்கர் பரப்பளவில் ரூ.6 கோடி மதிப்பில் தேயிலை குழுமம், மோப்பிரிப் பாளையத்தில் 227 ஏக்கர் பரப்பளவில் ரூ.24.32 கோடி மதிப்பில் கொடிசியா (CODISSIA) தொழில் பூங்கா, பொது உற்பத்தி உட்கட்டமைப்பு வசதி திட்டங்கள் (CPI) கீழ் சூலூர் வட்டம், அப்பநாயக்கன்பட்டி புதூரில் ரூ.4 கோடி மதிப்பில் பிளாஸ்டிக் மறுசுழற்சி குழுமம் ஆகியவை செயல்பட்டு வரு கின்றன. கள்ளப்பாளையத்தில் 116 ஏக்கர் பரப்பளவில் ரூ.24.32 கோடி மதிப்பில் கொடிசியா (CODISSIA) தொழில் பூங்கா, சொலவம்பாளையத்தில் 42.42 ஏக்கர் பரப்பளவில் ரூ.18.06 கோடி மதிப்பில் கொசிமா (COSIEMA) தொழில் பூங்கா, வெள்ளலூரில் ரூ.4.44 கோடி மதிப்பில் வார்ப்பு குழுமம், மதுக் கரையில் ரூ.4.76கோடி மதிப்பில் பொறியியல் குழுமத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
பொது வசதி மையம் குறு மற்றும் சிறு தொழில்கள் (MSE) / குழும வளர்ச்சி திட்டத்தின் (CDP) கீழ் ரூ.15.30கோடி மதிப்பில் தங்க நகைக் குழுமம் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. மேலும், கிட்டாம்பாளையத்தில் 316.04 ஏக்கர் பரப்பளவில் ரூ.24.61 கோடி மதிப்பில் அறிஞர் அண்ணா தொழிற் கூட்டுறவு தொழிற்பேட்டை மற்றும் சின்னவேடம் பட்டியில் ரூ.5.73 கோடியில் அலு மினியம் அச்சுவார்ப்பு குழுமம் தொடங் கப்பட உள்ளது. இதனிடையே கொடிசியா தொழில் பூங்காவில் சிஎன்சி இயந்திரங்களில் உபயோகப்படுத்தபடும் கருவிகள் தயாரிக்கும் பால்கன்டூலிங் நிறுவனம், மோட்டார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் பெர்பெக்ட் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஆகியவற்றை கோவை மாவட்ட ஆட்சி யர் ஜி.எஸ்.சதீரன் நேரில் பார்வை யிட்டு, கருவிகள், உதிரிபாகங்கள் எவ் வாறு தயாரிக்கப்படுகின்றது என்பது குறித்து தொழில் நிறுவன பணியாளர் களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது சிட்கோ மேலாளர் ஷர்மிளா, மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலை வர் சசிகுமார், வார்டு உறுப்பினர் சத்தியவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.