பொள்ளாச்சி, ஜூலை 6- பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மாக நோட்டு புத்தகங்கள் புதனன்று வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச நோட்டு, புத்தகங்கள் மற்றும் பேனா உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் நேதாஜி சுபாஷ் சந்தரபோஸ் இளைஞர் பேரவையால் வழங் கப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள பேரவை அலுவலகத்தில் புதனன்று நடைபெற்றது. இந்நிகழ் விற்கு பேரவையின் பொள்ளாச்சி தலைவர் வெள்ளை நட ராஜ் தலைமை வகித்தார். தீ இனிது அமைப்பின் கவிஞர் சோழ நிலா வரவேற்று பேசினார். பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழக்கறிஞர் முத்துக்குமார் வழங்கி னார். இதில், பேரவையின் செயலாளர் மணிகண்டன், ஹரி கிருஷ்ணா, முத்தமிழ் விக்னேஷ், ஏராளமான மாணவ, மாண விகள் மற்றும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்ட னர். முடிவில் நேதாஜி பேரவை உறுப்பினர் விக்னேஷ் நன்றி கூறினார்.