districts

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து இன்று பேச்சுவார்த்தை

ஈரோடு, பிப். 11- ஈரோடு மாநாகராட்சி தூய்மைப்  பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து ஒத்திவைக்கப்பட்ட பேச்சு வார்த்தை (இன்று)வியாழனன்று  நடைபெறுகிறது. ஈரோடு மாநகராட்சியில் கணிச மான நிரந்தரப்படுத்தப்படாத தூய் மைப் பணியாளர்களும், குறைவான நிரந்தரப்படுத்தப்பட்ட தூய்மைப் பணி யாளர்களும், பணியாற்றி வருகின்ற னர். அதேபோல பல்வேறு பிரிவுகளில்  ஊழியர்கள் உள்ளனர். இத்தொழிலா ளர்களுக்கு பணி நிரந்தர சட்டப்படி 2  ஆண்டுகளில் 480 நாட்கள் பணி முடித் திருந்தால் பணி நிரந்தரம் வழங்கப்பட வேண்டும். 17 ஆண்டுகளைக் கடந்த நிலையிலும் இவர்களுக்குப் பணி நிரந் தரம் வழங்கப்படவில்லை.  இவர்கள் சிஐடியு சங்கத்தில் இணைந்து அரசாணைப்படி ஊதியம்,  பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கை களுக்காக பல்வேறு கட்ட போராட்டங் களை முன்னெடுத்து வருகிறது.  இந்நிலையில் தனியார் மயத்தைக் கைவிட வேண்டும். அரசாணைப்படி ஊதியம் வழங்க வேண்டும். பணி நிரந் தரம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  சார்பில் கடந்த 26 ஆம் தேதியன்று  வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.  இந்நிலையில் தொழிலாளர் துறை தலையிட்டு பேச்சுவார்த்தை நடத் தியது. 3 கட்ட பேச்சுவார்த்தைகள் நடை பெற்ற நிலையில், சில கோரிக்கை களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உடன் பாடு தெரிவித்தது. எனினும் ஒப்பந்தம்  ஏற்படவில்லை. இதற்கிடையில் ஈரோடு  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர் தல் நடைபெற்றதால் பேச்சுவார்த்தை  ஒத்தி வைக்கப்பட்டது.  இதற்கிடையில் வியாழனன்று மீண் டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சு வார்த்தையில் நிர்வாகம் என்ன செய் யப் போகிறது என்பதைப்பொருத்து, அடுத்த கட்ட நகர்விற்கு சிஐடியு முடி வெடுக்க உள்ளது.