உடுமலை, ஆக. 13 - உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் மேற்கு மலைத் தொடர்ச்சியில் வாழ்ந்த வள்ளல் பெருமக்களை ஆய்வு செய்து வரு கின்றனர். குமண வள்ளல் ஆட்சி செய்த கொழுமம் பகுதியின் வரலாற் றினை களப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வரும் உடுமலை வர லாற்று ஆய்வு நடுவத்தின் தொல்லி யல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி மற் றும் கள ஆய்வாளர்கள் அருட்செல் வன், சிவகுமார் ஆகியோர் கொழு மம் பகுதியில் ஆய்வு செய்து வரு கின்றனர். இந்த ஆய்வில் கொழுமத்திற் கும் ஆண்டிபட்டிக்கும் இடையில் உள்ள மலைக்குன்றில் கற்திட்டை கள் இருப்பதும், முதிரமலை என் பதற்கான அடையாளமாக கொள் ளுச்செடி இருப்பதையும் ஆவணப்ப டுத்தினர். முதிரம், முதிரமலை என் பது தமிழிலும் மலையாளத்திலும் நாம் உணவில் உட்கொள்ளும் கொள் ளுச்செடிகள் நிறைந்த மலைப்பகுதி யாக இருப்பதால் முதிரமலை என்ப தையும் நேரில் ஆய்வு செய்து உறு திப்படுத்தினர். மேலும், சங்க இலக்கியப்பா டல்களில் கூறப்படும் மலையரண், காடரண் என்ற செய்திகளை உறுதிப் படுத்தும் வகையில் வட்டார வழக் கில் கரடு, மலை என்று சொல்வதை இலக்கியங்களில் காடரண், மலைய ரண் என்று சொல்லியிருப்பதை நேரில் கண்டு ஆவணப்படுத்தியுள் ளனர். இது குறித்து அவர்கள் கூறும் போது கொழுமத்திலிருந்து தெற்கில் பார்க்கும் போது மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியிருக்கும் கரடுகள், குன்றுகள் அனைத்தும் காடரண், மலையரண் கொண்டவை. இந்த மலைகளுக்குள் இரண்டு ஏக்கர் பரப் பளவில் காடுகள் இருப்பதையும் அதில் கொள்ளு எனும் முதிரச்செடி கள் இருப்பதையும் நேரில் கண்டு ஆவணப்படுத்தினோம். மற்றும் முதிரை மலை என்பது கொள்ளுச்செ டிகள் நிறைந்த மலை என்பதற்கும், முதிரைமலைத்தலைவன் குமணன் வசித்தமைக்கான சான்றுகளாக இலக்கியங்கள் கூறுவது இவ்வி டங்கள் என்பதையும் தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி உறுதிப்ப டுத்தினார். மேலும் கடந்த பத்தாண்டுக ளுக்கு முன்பு வரையில் இந்த மலைப் பகுதியில் மானாவாரியாக கொள்ளு பயிர் செய்திருப்பதையும் தற்போது அங்கிருந்து மக்கள் வெளியேறி கொழுமம், பாப்பம்பட்டி பகுதியில் குடியேறி இருப்பதையும் தெரியவ ருகிறது. இவ்விடத்தைப் பற்றி அந்தப் பகுதி மக்கள் கூறும்போது பாண்டி யராஜா மடம் என்று கூறுகின்றனர்.மேலும் இது போன்ற கற்திட்டைகள் கொடைக்கானல் மலைப்பகுதிக ளில் குறிப்பாக மன்னவனூர், கூக் கால் போன்ற பகுதிகளில் அதிகள வில் கற்திட்டைகள் இருப்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். அதற் கேற்றாற்போல் பெரிய அளவில் கற் திட்டை இருப்பதும், அதனருகே சுமார் 15 அடிக்கும் மேல் ஒரே பாறைக் கல்லில் பெருங்கற்காலக் கற்திட்டை இருப்பதையும் நேரில் ஆய்வு செய்து ஆவணப்படுத்தினர். இங்கு பெருங்கற்காலத்தில் மக் கள் வசித்ததையும், முதிரை மலைத் தலைவன் குமணன் இங்கு ஆட்சி செய்தமைக்கான சான்றுகளாக பெருங்கற்காலக் கற்திட்டைகள் இருப்பதையும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் உறுதிப்படுத் தினர்.