தருமபுரி, ஜூலை 3- கெங்கலாபுரத்தில் இருந்து சிவாடி ரயில் நிலையம் வரை பழுதடைந்த நிலை யில் காணப்படும் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள கெங்கலாபுரம் தேசிய நெடுஞ் சாலை மேம்பாலம் பிரிவு சந்திப்பு சாலை யிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலை வில் சிவாடி கிராமம் உள்ளது. இக்கிராமத் தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த நான்கு ஆண்டுகளாக இக் கிராமத்திற்கு செல்லும் தார்ச்சாலை முற்றி லுமாக பெயர்ந்து பழுதடைந்து காணப்படு கிறது. ஆங்காங்கே சாலை கரடு முரடாக இருப்பதால் பொதுமக்கள் வாகனங்களில் சென்று வருவதற்கும் மிகவும் சிரமத்திற் குள்ளாகி வருகின்னனர். சிவாடி ரயில் நிலை யம் வரை தார்ச்சாலையும் பழுதடைந்துள் ளது. பழுதான இந்த தார்ச்சாலையால் இரவு நேரங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர் வாகம் உரிய கவனம் செலுத்தி, சிவாடி ரயில் நிலையம் வரை செல்லும் தார்ச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.