districts

img

அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கிடுக

உதகை, மார்ச் 15- கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை தேவாலா பகு தியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட னர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் சட்டப்பிரிவு- 17 நிலத்தில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். வன  விலங்குகளில் இருந்து விளை பயிர்களையும், மனித உயிர்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடலூர், பந்தலூர் தாலு காக்களில் வசிக்கும் அனைத்து வீடுக ளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண் டும். மலை காய்கறிகளுக்கு நியா யமான முறையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற் றப்படும் என திமுக கடந்த சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில் குறிப்பிட் டிருந்தது. அதனை உடனடியாக உட னடியாக தமிழக ஆட்சிப் பொறுப் பில் உள்ள திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் நீல கிரி மாவட்டம், தேவாலா பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர் அனீபா மாஸ்டர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.ஏ. பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் என்.வாசு, சிபிஎம் ஏரியா செயலாளர் கே.ராஜன், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.