districts

img

கட்டுமானப்பணிகளுக்காக பாறைகள் உடைப்பு தமிழக அரசின் முன்னாள் செயலாளர் தர்ணா

உதகை, ஜூலை 3- உதகையில் கட்டுமானப் பணிகளுக்காக  பாறைகள் உடைப்பதை தடுக்க வலியுறுத்தி  தமிழக அரசின் முன்னாள் செயலாளர், நீலகிரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா வில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு மற் றும் வடகிழக்கு பருவமழை சமயங்களில் நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்படுகின் றன. மாவட்டத்தில் மழை உள்ளிட்டவற்றால்  பேரிடர்கள் ஏற்படும் அபாயமுள்ள பகுதிக ளாக 284 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு  மற்றும் பாறை உடைக்கவும், முறையான அனுமதி இன்றி ஜேசிபி இந்திரங்கள் இயக் கவும் தடை உள்ளது. இதை மீறுபவர்கள் மீது  மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து  வருகிறது. இந்நிலையில், உதகையிலிருந்து கோத் தகிரி செல்லும் சாலையில் கோடப்பமந்து பகு தியில் தடைகளை மீறி பாறை உடைக்கப் பட்டு கட்டுமானப் பணிகள் நடைப்பெற்று வரு வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் சமூக ஆர்வ லருமான சுர்ஜித் கே.சவுத்திரி என்பவர் கடந்த  இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சிய ருக்கு குறுஞ்செய்தி மூலம் புகார் அளித்துள் ளார். இதனையடுத்து, விசாரிப்பதாக பதில் அளித்த மாவட்ட ஆட்சியர்  இரண்டு நாட்களா கியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், பாறை கள் தொடர்ந்து வெடி வைத்து உடைக்கப் பட்டு ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தி கட்டு மானப் பணிகள் நடைபெற்று வருவதாக கூறி  ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் முன்னாள் வேளாண் துறை செயலாளருமான சுஜித் கே.சவுத்திரி, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அருண் வெள்ளி, ஜனார்த்தனன் புதனன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற் பட்டது. இதனையடுத்து, உதகை காவல் துணை கண்காணிப்பாளர் யசோதா, காவல்  ஆய்வாளர்கள் மீனா பிரியா, முரளிதரன் ஆகி யோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.  பின்பு அவர்களை போலீசார், சர்ச்சைக் குறிய அந்த இடத்திற்கு அழைத்து சென்ற னர். சம்பவ இடத்திற்கு சென்றபோது செவ் வாயன்று வரை  அவர்கள் அனுமதி வாங்கி  இருப்பது தெரிய வந்தது. எனவே இருதரப்பி னரும் அந்த இடத்தில் வாக்குவாதத்தில் ஈடு பட்டனர்.  பின்னர் அந்தப் பகுதியில் பணியாற்றிய ஒப்பந்ததாரர் இரண்டு பேரையும், சமூக ஆர் வலர்களையும் மாவட்ட காவல் துணை கண் காணிப்பாளர் அலுவலகத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர். முன்னதாக இதுகுறித்து தமிழக அரசின் முன்னாள் செயலாளர் சுர்ஜித் கே.சவுத்ரி கூறு கையில், ‘நீலகிரியின் சுற்றுச்சூழலை பாது காக்க மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப் பட்டது. அச்சட்டத்தின் படி நிலச்சரிவு அபா யம் உள்ள பகுதிகளில் கட்டிடங்கள் கட்டக் கூடாது. ஆனால், உதகையில் நிலச்சரிவு  அபாயம் உள்ள பகுதிகளில் பிரமாண்ட  கட்டுமானங்கள் நடைபெற்று வருகின்றன.  மேலும், ராட்சத பாறைகள் உடைக்கப்படு கின்றன. அதற்கு யார் அனுமதி அளித்தது. சுற் றுச்சுவர் அனுமதிக்கப்பட்டுள்ள 10 அடிக்கு மேல் உயரமாக கட்டப்பட்டுள்ளது. மேலும்,  அனுமதி இல்லாமல் ஆழ்துளை அமைக் கப்பட்டுள்ளது. விதிமீறலுக்கு உடந்தையாக  உள்ள அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.