தருமபுரி, ஏப்.27- போலியான செயலியில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் வெளி யிடப்பட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்ப வளர்ச்சியாலும், செல்போன்கள் பயன்ப டுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித் துள்ளதாலும், நாளுக்கு நாள் இணைய வழி மோசடிகள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இது தொடர்பாக தருமபுரி மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் பல்வேறு வழிமுறைகளில் மக்களை சென்ற டையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கள் ஏற்படுத்தி வருகின்றனர். இருப்பினும் மோசடி நபர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி அவர்கள் வாட்சப், டெலிகிராமில் அனுப்பும் லிங்க் ஐ க்ளிக் செய்து போலியான இணையதளம் மற்றும் செயலிகளில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என ஆசைப்பட்டு பொதுமக்கள் பணத்தை இழந்து வருவது சமீப காலமாக அதிகரித்துக் கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது தரும புரி மாவட்டத்தில் எச்.பி, என்ற போலியான முதலீட்டு செயலி ஒன்று பொதுமக்களி டையே அதிக அளவில் பகிரப்பட்டு அதில் முதலீடு செய்து பலர் பணத்தை இழந்துள்ள னர். எச்.பி., செயலி மூலம் பணத்தை இழந்த சிலர் தருமபுரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்ற சைபர் கிரைம் போலீசார், கூடு தல் காவல் கண்காணிப்பாளர் பாலசுப்பி ரமணியனின் வழிகாட்டுதலின் படி, மோசடி கும்பலை கண்டறிந்து நடவடிக்கை மேற் கொள்ள தீவிர புலன் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். எனவே, தருமபுரி மாவட்ட மக்கள், பரவலாக பரவியுள்ள இந்த போலி செயலி மூலமாக பணத்தை இழக்க வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இச்செயலியில் ஆரம்பக் கட்டத்தில் சில சிறிய முதலீட்டிற்கு லாபம் கிடைக்கச் செய்து, பின்னர் பெரிய அளவில் முதலீடு செய்ய வைத்து ஏமாற்றுவார்கள். ஆகவே இது போன்ற போலியான முதலீட்டு செயலி களை நம்ப வேண்டாம். மேலும், பாதிக் கப்பட்டவர்கள் உடனடி பரிவர்த்தனை களுக்கு 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணை தொடர்பு கொண்டு தங்களது புகாரினை தெரிவிக்கலாம் அல்லது www. cybercrime.gov.in என்ற இணையத ளத்திலும் புகரை பதிவு செய்யலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.