தருமபுரி ஜூலை 16- மதச்சார்பற்ற நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் மதம் சார்ந்த பூஜைகள் செய்வ தற்கு அதிகாரிகள் அனும தித்தற்கு தருமபுரி எம்பி., செந்தில்குமார் கடும் ஆட் சேபனை தெரிவித்து அதி காரிகளுக்கு அறிவுரை கூறினார். பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள ஆலாபுரம் ஏரியில் அரசுகளின் பங்க ளிப்புடன் கூடிய நீர்வள சீரமைப்பு பணிக்காக ரூ 1.5 கோடி செலவில் சீர மைப்பு பணிதுவக்கவிழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாட்டை பொதுப்பணித்துறை அதிகாரிகள் செய்திருந்தனர். இந்நிகழ்வை துவக்கிவைக்க தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில்குமார் பங்கேற்க வந்திருந்தார். அப்போது துவக்கவிழாவில் பார்ப்பனர்களை வைத்து பூஜை செய்ய பொதுத்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதனை பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அனைத்து சமூக மக்களும் பங்கேற்க்கும் அரசு நிகழ்ச்சியில் ஒரு மதம் சார்ந்த பூஜை பொருட்களுடன் சடங்கு சம்பிரதாயங்களை செய்யக்கூடாது என அரசு ஆணை உள்ளது. இதுபோன்று நிகழ்ச்சிகள் செய்யும் போது அனைத்து சமூகம் சார்ந்தவர்களையும் அழைக்கவேண்டும். ஒருமதம் சார்ந்த பூஜை நடத்துவது அரசாணைக்கு எதிரானது இதுபோன்று அரசு நிகழ்ச்சிகளில் மதம் நிகழ்ச்சிகள் செய்யக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். இதனையடுத்து பூஜை உள்ளிட்ட சடங்குகள் நடைபெறாமல் அரசு நிகழ்வு நடைபெற்றது.