districts

img

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தருமபுரி  கட்டி முடிக்கப்பட்ட ஒரே  மாதத்தில்சேதமடைந்த கழிவுநீர்  கால்வாய்

தருமபுரி, ஜூன் 15- தூதரையன்கொட்டாய் கிராமத்தில் கட்டி முடிக்கப் பட்ட ஒரே மாதத்தில் சேதமடைந்த கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.

தருமபுரி ஒன்றியம், தருமபுரி - திருப்பத்தூர் சாலை யில் உள்ள தூதரையன்கொட்டாய் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால் வீடுக ளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட் டது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத் திடம் புகாரளித்தனர். இதைத்தொடர்ந்து வீடுகளிலிருந்து கழிவுநீரை வெளியேறுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்தப்பட்டது. இதனி டையே, மாவட்ட முழுவதும் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வந்தது. மழையின் காரணமாக கால்வாய் அருகே மண்சரிவு ஏற்பட்டதால் கால்வாய் சுவர் இடிந்து விழுந்துள்ளது. தரமில்லாமல் வெறும் பெயரள விற்கே கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டுள்ளதால், சாதாரண மழைக்கே இடிந்து விழுந்துள்ளது. இதனால் கழிவுநீர் வெளி யேற முடியாமல் பழையபடி அங்கேயே தேங்கி இருப்ப தால் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே, தரமான முறையில் சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கக் கூட்டம்

நாமக்கல், ஜூன் 15- நாமக்கல் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கக் கூட்டத்தில், பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந் துள்ள சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில், மாவட்ட கொசு ஒழிப்பு பணியாளர்கள் சங்கக் கூட்டம், சங்கத்தின்  தலைவர் ஆர்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. செய லாளர் என்.வேலுச்சாமி, சங்கத்தின் செயல்பாடுகள் குறித் தும், எதிர்கால இயக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்து பேசி னார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, பணி நிரந் தரம் செய்யக்கோரி மனு வழங்குவது, மாதந்தோறும் 7 ஆம் தேதிக்குள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை  வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. கூட்டத்தை நிறைவு செய்து சங்கத்தின் இணைச்செயலாளர் இளவேந்தன் உரையாற்றினார். இதில்  நிர்வாகிகள் லட்சுமி, விஜயா, ஈஸ்வரமூர்த்தி, திருநாவுக்கரசு, கோபால், பரிமளா உட்பட பலர் கலந்து கொண்டனர். சத்யா  நன்றி கூறினார்.

தனியார் பள்ளியில் ரத்ததான முகாம்

நாமக்கல், ஜூன் 15- குமாரபாளையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற ரத்ததான முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டு, ரத்ததானம் செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தாலுகா, சீராம் பாளையத்திலுள்ள தனியார் பள்ளியில், உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. திருச் செங்கோடு அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான குழுவினருடன் இணைந்து நடத்திய இம்முகாமில், இப்பள்ளியைச் சேர்ந்த 52க்கும் மேற் பட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி  ஒருங்கிணைப்பாளர் சரண்யா, உடற்கல்வி இயக்குநர்கள் விஜயகுமார், ஆண்டனி, வசந்த், யுவராணி ஆகியோர் செய்தி ருந்தனர். இம்முகாமில் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை ரத்த வங்கி பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவி கள் பலர் பங்கேற்றனர்.

சுகாதாரமான உணவு வழங்க அறிவுறுத்தல்

நாமக்கல், ஜூன் 15- சுகாதாரமான உணவு வழங்க வேண்டும் என சாலையோர வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் - சங்ககிரி சாலை, வெப்படை நால்ரோடு பகுதியில், குமாரபாளையம், பள்ளி பாளையம் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரங்கநாதன், 20க்கும் மேற்பட்ட சாலையோர துரித உணவுக்கடைகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது சுவைக்கா கவும், நிறத்திற்காகவும் சாயம் கலந்த மிளகாய் பொடி மற்றும் சில்லி சிக்கன் பொடிகள் பயன்படுத்தப்படுவதை கண்டறிந் தார். மேலும், சுகாதாரமற்ற முறையில் உணவு பாத்திரங்களை  மூடாமல் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு, சுமார் 5  கிலோ அளவில் சாயம் கலந்த சில்லி சிக்கன் மற்றும் உணவுப் பொருட்கள் அழிக்கப்பட்டன. மேலும், சூடான உணவுகளை  இலை மற்றும் சில்வர் பாயில் பேப்பர்களை பயன்படுத்தி பார்சல் செய்யவும், ஒருமுறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினார். சுத்தமான முறையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ய வேண் டும் எனவும் சாலையோர வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி னார்.

நாமக்கல்  அவசரகால வழியில்லாமல் தி ரையரங்கம் கட்டப்படுவதாக புகார்

நாமக்கல், ஜூன் 15- பள்ளிபாளையத்தில், அவசரகால வெளியேறும் வழி  இல்லாமல் திரையரங்கம் கட்டப்படுவதாக புகார் எழுந்துள் ளது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியன் என்ற அழகர்சாமி என்பவர், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், பள்ளிபாளையம் -  குமாரபாளையம் சாலையில் அமைந்துள்ள தனியார் திரைய ரங்கில் புதிதாக இரண்டு அடுக்குமாடி திரையரங்கம் கட்டப் பட்டு வருகிறது. இதில் படம் பார்க்க வரும் பார்வையா ளர்களுக்கு அவசர வழிப்பாதை இல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே உள்ள அவசரகால வெளியேறும் பாதையை மறைத்து, புதிய திரையரங்கங்கள் கட்டப்பட்டு வருகிறது. விபத்து போன்ற சமயங்களில் பொதுமக்கள் வெளி யேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் பல்வேறு திரையரங்கம் மற்றும் மால்களில் அவசரகால வழி உள்ளது.  இருப்பினும் அங்கு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஒரு திரையரங்கில் அவசரகால வழியே இல்லாமல் கட்டிடம் எழுப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு, உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் 

 நாமக்கல், ஜூன் 15- திருச்செங்கோட்டிலுள்ள பிரசித்திபெற்ற கோவில் தெப்பக்குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால், துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலின் உப கோவில்களில் ஒன்றான குமாரமங்க லம் பாண்டீஸ்வரர் கோவில் எதிரில் கோவில் குளம் ஒன்று  உள்ளது. இதில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு நீரை சேமித்து தண்ணீர் சுத்தமாக இருக்க மீன்களை விட்டு வளர்த்து வந்தனர். இந்நிலையில், வியாழனன்று திடீரென மீன்கள் செத்து மிதக்க தொடங்கியன. இதுகுறித்து தகவ லறிந்த பொதுமக்கள் தண்ணீர் அசுத்தமாக இருக்கலாம் எனக்கருதி, புதிய தண்ணீரை அந்த குளத்திற்குள் விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், மீன்கள் உயிருக்கு போராடும் நிலையில் செத்து மிதக்கின்றன. செத்து மிதக்கும் மீன்களால்  துர்நாற்றம் வீசுவதாகவும், மீன்களை அகற்றிவிட்டு, தண் ணீரை மாற்றி புதிய தண்ணீர் விட்டு தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொப்பரை ஏலம்  

நாமக்கல், ஜூன் 15- நாமக்கல் மாவட்டம், பர மத்திவேலூர் பொத்தனூர், வெங்கமேட்டில் உள்ள மின் னணு தேசிய வேளாண்மை  சந்தையில் நடைபெற்ற ஏலத் திற்கு 6,345 கிலோ கொப் பரையை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு  கிலோ ரூ.91.66க்கும், குறைந் தபட்சமாக ரூ.88.99க்கும், சராசரியாக ரூ.90.39க்கும் ஏலம்போனது. மொத்தம் ரூ.5 லட்சத்து 34 ஆயிரத்து 234க்கு வர்த்தகம் நடை பெற்றது.