ஈரோடு, மார்ச் 18- சாதிய நோக்கத்தில் பட்டியலின மாணவர்களை கொத்தடிமை போல் நடத்திய அரசுப்பள்ளி தலைமை ஆசி ரியரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியு றுத்தி ஈரோடு நடுப்பாளையத்தில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட் டம், பெரியூர் உள்ள அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வரு கின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 8 ஆம் தேதியன்று பள்ளி தலைமை ஆசிரியர் தனலட்சுமி, பட்டியலின மாணவர்கள் இரண்டு பேரை முட்டி போட்டு தரையில் பெயின்ட் அடிக்க வைத்துள்ளார். இந்நிகழ்வை அந்த வழியாக சென்றவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவி டார். இதையடுத்து மறுநாள் சம்பந்தப் பட்ட கல்வித்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டனர். மேலும், இது குறித்து விளக்கம் கேட்டு பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராம கிருஷ்ணன் நோட்டீஸ் வழங்கினார். இந்நிலையில், பட்டியல் இன மாணவர்களை சாதிய நோக்கத்தில் கொத்தடிமை போல் நடத்திய பள்ளி ஆசிரியரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து, துறைரீதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி நடுப்பாளையம் பேருந்து நிறுத் தம் முன்பு இந்திய மாணவர் சங் கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தாலூகா செயலாளர் ஆர்.சிவலிங்கம் தலைமை வகித்தார். இதில், மாணவர் சங்க மாவட்ட தலைவர் வினிஷா, மாவட்ட செயலா ளர் நவீன்குமார், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் எம்.அண்ணாதுரை, மாவட்ட செய லாளர் பி.பி.பழனிச்சாமி, வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எம்.சசி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் முருகேசன், தாலுகா செயலாளர் கனகவேல், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலா ளர் சண்முகவள்ளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.