ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காத தமிழக ஆளுநரை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல், பள்ளி பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.லட்சுமணன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர் கௌசல்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.