ஈரோடு, மார்ச் 18- ரயில்வேயில் தனியார் மயத்தை புகுத் தாதே உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி டிஆர்இயு சார்பில் வெள்ளியன்று ஈரோடு உதவி பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ரயி்வே கேட் மேனாக நியமிப்பதை எதிர்த்தும், கான்ட்ராக்ட் தொழிலாளர்களை பணியமர்த் துவதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்காதே, என்ஜினியரிங் பிரிவில் வேலை செய்யும் தொழிலாளிகளின் பதவி உயர்வை பறிக்காதே ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி உதவி கோட்ட பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கோட்ட உதவி தலைவர் சுப்பிர மணி தலைமை வகித்தார். உதவி பொது செய லாளர் கே.பிஜு, ஓய்வூதியர் சங்க உதவி பொது செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். நிறைவாக கிளை தலைவர் சௌகத் அலிகான் நன்றி கூறி னார். இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளான தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.