districts

7 ஆண்டுகளாக முதலீடு செய்த பணத்தை திரும்ப தராத பிஎசிஎல் நிறுவனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.8- பிஎசிஎல் நிறுவனம் முதலீட்டாளர்க ளுக்கு 7 ஆண்டுகளாக முதலீடு செய்த  பணத்தை திரும்ப தராமல் காலதாமதம்  செய்து வருகிறது. முதலீட்டாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதலீட்டுப் பணத்தை வட்டியுடன் கிடைக்க ஆவணம் செய்ய வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங் களன்று முதலீட்டாளர்கள் கண்டன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  1996 ஆம் ஆண்டு முதல் டெல்லியை  தலைமையிடமாகக் கொண்டு பிஎசிஎல்  என்ற நிறுவனம் நாடு முழுவதும் செயல் பட்டு வந்தது. இதில், சுமார் 5.85. கோடி  முதலீட்டாளர்கள் ஏறத்தாழ ரூ.49 ஆயி ரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளார் கள். தமிழகத்தில் மட்டும் ஒரு கோடி  முதலீட்டாளர்கள் ஏறத்தாழ ரூ.10 ஆயி ரம் கோடி முதலீடு செய்துள்ளார்கள். இந்நிறுவனம் நாடு முழுவதும் 23 மாநி லங்களில் 193 மாவட்டங்களில் 3 லட் சத்து 85 ஆயிரம் ஏக்கர் நிலங்களை வாங் கியுள்ளது. இதைத்தொடர்ந்து இந்நிறு வனம் செயல்படுவதற்கு தடைவிதிக்க வேண்டி வழக்கு தொடரப்பட்டது, ஆனால் தீர்ப்பு நிறுவனத்திற்குச் சாத கமாக வந்தது. இதையடுத்து செபி அமைப்பு கடந்த 2014 ஆண்டு உச்ச  நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து  பிஎசிஎல் நிறுவனம் பொதுமக்களிட மிருந்து நிதி வாக்க தடை பெற்றுவிட் டது. இதையடுத்து, நீதியரசர் லோதா தலைமையில் குழு அமைக்கப்பட்டு 6 மாத காலத்தில் முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி அளிக்க வேண்டு மென்று உத்தரவிடப்பட்டது. ஆனால் 7  ஆண்டுகளாக பணத்தை திருப்பி தரா மல் காலதாமதப்படுத்தி வருகிறார்கள்.  முதலீட்டாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு முதலீட்டு பணத்தை  வட்டியுடன் கிடைக்க ஆவணம் செய்ய  வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் முதலீட்டாளர்கள் கண்டன் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.