districts

img

அரூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்றி பொதுப்பாதையை மீட்டுத்தர கோரிக்கை

தருமபுரி, ஜூலை 16- வாதப்பட்டி கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பொதுப்பாதையை மீட்டுத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கொங்குவேம்பு ஊராட் சிக்குட்பட்டது வாதப்பட்டி. இக்கிராமத்தில் 100க்கும் மேற் பட்ட ஆதிதிராவிடர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.  இக்கிராமத்திற்குட்பட்ட செங்குட்டை தார்ச்சாலையிலிருந்து முனியன் கொட்டாய் வரை அரசு புறம்போக்கு பாதையை அக் கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்ற னர். இச்சாலையை தார்ச்சாலையாக மாற்ற வேண்டும் என வும் அம்மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பொதுமக்க ளின் கோரிக்கையை ஏற்று தார்ச்சாலை அமைக்க அளவீடு பணி நடைபெற்றது. இந்நிலையில், அதேபகுதியைச் சேர்ந்த  தனிநபர் இச்சாலையை ஆக்கிரமித்துள்ளார். மேலும், சாலை அளவீடு பணியை செய்யவிடாமல் தடுத்து அராஜக போக்கில் ஈடுபட்டு வருகிறார். எனவே, ஆக்கிரமிப்பை அகற்றி பொதுப் பாதையை மீட்டுத்தர வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளனர்.