சிறு குறு தொழில் அழிவுக்கு வழிவகுக்கும் மின் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரிக்கை
திருப்பூர், ஜூலை 17 - திருப்பூர் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களின் அழி வுக்கு வழிவகுக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண் டும் என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் கள் சங்கம் (டீமா) கோரியுள்ளது.
டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம் மின் கட்டண உயர்வு தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கடந்த பத்து மாதங்களாக பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்தும் அரசு கண்டு கொள்ளாமல் ஒட்டுமொத்த சிறு, குறு, நடுத்தர தொழில்களை அழிக்கும் மின் கட்டண உயர்வை மீண்டும் துவங்கியுள்ளது.இந்தியாவி லேயே சிறு, குறு நடுத்தர தொழில் செய்பவர்கள் அதிகமாக உள்ள மாநிலம் தமிழகம். திருப்பூரில் 90 சதவீதம் சிறு, குறு, நடுத்தர தொழில் செய்பவர்கள் உள்ளார்கள். அவர்கள் 50 சதவீதத்திற்கு மேல் தொழிலை விட்டு வெளியேறி உள்ளார் கள். இன்றைய நிலையில் மின் கட்டண உயர்வில் இருந்து ஏற்கனவே மீள முடியாமல் உள்ள நிலையில், தற்போது மின் கட்டண உயர்வு என்பது ஒட்டுமொத்த சிறு, குறு, நடுத்தர தொழில் அழிவுக்கு வழி வகுக்கும். எனவே தமிழக அரசு மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், என்று முத்துரத்தி னம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
462 பேருக்கு கலைஞரின் கனவு திட்ட வீடுகள்
திருப்பூர், ஜூலை 17- தாராபுரம் பகுதியில் கலைஞரின் கனவு திட்ட வீடுகளை 462 பயனாளிகளுக்கு அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி அரிமா அரங்கத் தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் தாரா புரம், மூலனுார் மற்றும் குண்டடம் ஆகிய ஊராட்சி ஒன்றியத் திற்குட்பட்ட 462 பயனாளிகளுக்கு ரூ9.79 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகள், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக்கான ஆணைகள் ஆகியவற்றை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல் வராஜ் செவ்வாயன்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், தாராபுரம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலை வர் எஸ்.வி.செந்தில்குமார், மூலனுார் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிச்சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் கள், உதவி பொறியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிர திநிதிகள் மற்றும் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்
உடுமலை, ஜூலை 17- உடுமலையில் நாளை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது.
உடுமலை அரசு கலைக்கல்லூரியின் கூட்ட அரங்கில் 19 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு வருவாய் கோட்டசியர் ஜஸ் வந்த் கண்ணன் தலைமையில் அனைத்து துறை அரசு அதி காரிகள் கலந்து கொள்ளும் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறுகிறது. உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகா விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வருவாய் கோட்டாசியர் தெரிவித்து உள்ளார்.
சேவூர் மனமகிழ் மன்றத்தை இடமாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
அவிநாசி, ஜூலை 17 – சேவூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள மனமகிழ் மன் றத்தை வேறு இடத்திற்கு மாற்றக் கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அவிநாசி அருகே சேவூர் செல்லும் சாலையில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இத னால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு பாதிப்பு உண் டாகும், பள்ளிக் குழந்தைகள் உட்பட பலருக்கு இதனால் பாதிப்பு உண்டாகும். எனவே மனமகிழ் மன்றத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கோரி ஆதித்தமிழர் பேரவை சார்பில் புதனன்று வட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட நிர்வாகி மணி தலைமை யேற்று நடத்தினார். இதில் அமைப்பின் மாநில துணைப் பொதுச் செயலாளர் விடுதலை செல்வன், ரங்கசாமி, பௌத் தம், கவிதா, பட்டம்மாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.a
நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
திருப்பூர், ஜூலை 17 - திருப்பூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 19 ஆம் தேதி (நாளை) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள் ளது.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவ லர் கூறியதாவது, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள் ளியன்று காலை 10.30 மணிக்கு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில், எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பி.இ., எம்.பி.ஏ. மற்றும் அனுபவம் உள்ள ஓட்டுநா்கள், வெல்டர், எலக்ட்ரீஷியன், பிளம்பர் மற்றும் மெக்கானிக் உள்ளிட்டவர்களும் பங்கேற்க லாம். திருப்பூரில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங் கேற்று தங்களுக்குத் தேவையான ஆள்களைத் தேர்வு செய் யவுள்ளனர். இதில், பங்கேற்க விரும்புபவர்கள் www.tnpriv atejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971152 அல்லது 94990-55944 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.