திருப்பூர், ஏப்.11- அனுப்பர்பாளையம் புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி யில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டித் தரக் கோரி, அப்பள்ளி யின் முன்னாள் மாணவர் அமைப்பினர் மற்றும் பெற்றோர் ஆசி ரியர் அமைப்பினர் செவ்வாயன்று மாநகராட்சி மேயர் தினேஷ் குமாரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் மாணவர் அமைப்பின் தலைவர் க.ஈஸ்வ ரமூர்த்தி, செயலாளர் ந.விஸ்வநாதன், பெற்றோர் ஆசிரியர் கழகம் தலைவர் ர.தேவராஜ், ந.ஆறுமுகம் துரைசாமி, க. ஆனந்த், வே.சன்முகம் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆ.உமா மகேஸ்வரி, உதவி ஆசிரியர் ராஜசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.