ஈரோடு, ஜூன் 12- தலித் மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாட்டை வகைமாற்றம் செய்து வேறு பயன்பாட்டிற்கு விடக்கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம், மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தலித் மக் கள் கோரிக்கை மனு அளித்து முறை யிட்டனர். ஈரோடு மாநகராட்சி, 4 ஆவது மண்டலத்தில் பெரியசடையம்பாளை யம் பிரிவு சாலையில் சுடுகாடு உள் ளது. இதில் பாரதிபாளையம், ஜீவானந்தா காலனி, பெரியசடை யம்பாளையம், காசிபாளையம், அண்ணா நகர் மற்றும் கரும்பாறை காலனியைச் சேர்ந்த அருந்ததிய மக் கள் இறந்தவர்களின் உடலை அடக் கம் செய்து வருகின்றனர். அத்துடன் இறந்தவர்களுக்கு கல்நடும் மாலா கோயிலும் அங்கு உள்ளது. இந்நி லையில், கடந்த 5 ஆம் தேதி எவ்வித அறிவிப்புமின்றி புல்டோசர் மூலம் சுடுகாடு சுத்தம் செய்யப்பட்டது. தக வலறிந்த அப்பகுதி மக்கள் அப்பணி யைத் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் சமாதானம் செய்தனர். அப்பகுதியினர் ஏற்காததால் திரும் பிச் சென்று விட்டனர். இதேபோல, கடந்த 2019 ஆம் ஆண்டு இப்பகுதி யில் திடக்கழிவு கிடங்கு அமைக்க முயற்சி செய்தது. அப்போதும் அப் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர். இவ்வாறு தலித் மக்கள் பயன்படுத்தி வரும் எந்தவொரு சொத்தையும் சேதப்படுத்துவதோ, கையகப்படுத்து வதோ தலித் மக்கள் மீதான வன் கொடுமை தடுப்புச்சட்டப்படி குற்ற மாகும். எனவே, அருந்ததிய மக்களின் பயன்பாட்டிலுள்ள சுடுகாட்டை வகை மாற்றம் செய்து வேறு பயன்பாட் டிற்கு விடுவதை அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஈரோடு தாலுகா செயலாளர் என். பாலசுப்பிரமணி மற்றும் அப்பகுதி மக்கள் புகார் மனு அளித்தனர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், என்.பழனி சாமி மற்றும் கே.நடராஜன் உள்ளிட் டோர் உடனிருந்தனர்.