districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி மரக்கன்று நடும் பணி துவக்கம்

கோபி, நவ.21- கோபிசெட்டிபாளையம் அருகே மரக்கன்று நடாமல், நட்ட தாக கல்வெட்டு வைக்கப்பட்ட சம்பவம் குறித்து தீக்கதிரில் செய்தி வெளியான நிலையில், அதன் எதிரொலியால் செவ்வா யன்று மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சியில், தேசி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.1.79 லட்சம் மதிப்பீட்டில்,  கணக்கம்பாளையம் முதல் சுண்டகரடு வரையில் சாலையின் இருபுறமும் மரக்கன்று நடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கணக்கம்பாளையம் முதல் சுண்டகரடு வரையில், சாலையின் இருபுறமும் மரக்கன்று நடா மல், மரக்கன்று நட்டதாக கல்வெட்டு வைக்கப்பட்டது.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண் டும் என தீக்கதிர் நாளிதழில் திங்களன்று செய்தி வெளி யானது. இதன் எதிரொலியாக செவ்வாயன்று கணக்கம்பாளை யம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் வேலை செய்யும் பணியாட்கள் மூலம், சுண்டகரடு சாலையில் முதற்கட்டமாக 60 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது. தொடர்ந்து சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெறும் எனவும், நடப்பட்ட மரகன்றுகளுக்கு முள்வேலி  அமைத்து பராமரிப்பு செய்யபடும் எனவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.