கோவை, ஏப்.25- உயர் நீதிமன்றத்தில், தமிழை அலுவல் மொழியாக்க வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். மாநில மொழிகளில் நீதிமன்ற பரி பாலனைகள் நடைபெறும் போது, வழக்காடிகளுக்கு ஒரு புரிதல் இருக்கும். உயர் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும், இது மாநில மக்களின் அடிப்படை உரிமையாகும் என இந்திய அரசியல் அமைப்பு சட்டத் தின் விதிகள் வலியுறுத்துகிறது. மேலும், மொழியின் வளர்ச்சியும் இதில் அடங்கியுள்ளது. சம்பந்தப் பட்ட மாநிலங்களின் தாய் மொழியில் நீதிமன்றங்கள் நடைபெறும் போதுததான் மக்களுக்கு சட்டத் தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையும், சரியான புரிதலும் ஏற்படும். எனவே, உயர்நீதிமன்றங்களில் தமிழை அலுவல் மொழியாக்க வலி யுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. முன்னதாக, கோவை நீதிமன்ற வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராமர் தலைமை ஏற்றார். இதில், அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் மாநில பொரு ளாளர் மாசேதுங், மாவட்ட செய லாளர் ஜோதிகுமார், செல்வம், ஆறுச்சாமி, வெண்மணி, மலவரன் உள்ளிட்ட திராளன வழக்கறிஞர்கள் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.