districts

ரூ.15 கோடி மதிப்பில் கோரிசோலா அணை பூங்கா

உதகை, மார்ச் 20- உதகை அருகேயுள்ள கோரி சோலா அணையை சுற்றிலும் ரூ.15 கோடியில் பூங்கா அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள உத கைக்கு நாள்தோறும் ஏராளமான சுற் றுலா பயணிகள் வருகின்றனர். குறிப் பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களிலி ருந்து அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற் றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்ட பெட்டா காட்சி முனை, குன்னூர் சிம்ஸ் பூங்கா, பைக்காரா அணை மற்றும்  நீர்வீழ்ச்சி போன்ற பகுதிகளுக்கு செல் கின்றனர். கடந்த பல ஆண்டுகளாக புதி தாக சுற்றுலா தலங்கள் ஏதும் உருவாக் கப்படாத நிலையில், இந்த சுற்றுலா  தலங்களுக்கே சுற்றுலா பயணிகள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட் டுள்ளது. எனவே, புதிதாக சுற்றுலா தலங்களை துவக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொடர்ந்து வலியு றுத்தி வருகின்றனர். இந்நிலையில், உதகை நகராட்சிக் குட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் புதி தாக சுற்றுலா தலங்களை அமைக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள் ளது. இதன்படி, உதகை அருகே தொட்ட பட்டா மலை அடிவாரத்தில் உள்ள  கோரிசோலா அணையை சுற்றிலும் ரூ.15 கோடியில் புதிதாக பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது. அணை யில் நீரின் கொள்ளளவையும் அதிக ரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கோரிசோலா அணையை நம்பியுள்ள மக்களின் தண்ணீர் பிரச்சனையும் தீர  வாய்ப்புள்ளது. அதேசமயம், சுற்றுலா  பயணிகளுக்கு புதிதாக ஒரு சுற்றுலா தலம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுகுறித்து நகராட்சி ஆணையா ளர் காந்திராஜன் கூறுகையில், உதகை  நகராட்சிக்குட்பட்ட கோரிசோலா அணையை மேம்படுத்த திட்டமிட்டுள் ளோம். இதற்காக, ரூ.15 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, தமி ழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதியளித்து, நிதி ஒதுக்கீடு செய்தால், இங்கு புதிதாக அணையை  சுற்றிலும் பூங்கா அமைக்கப்படும். மேலும், அணையில் தண்ணீர் அளவை உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப் படும். இதன் மூலம் சுற்றுலா பயணி களுக்கு புதிதாக ஒரு சுற்றுலா  தலம் கிடைக்கும். மேலும், அணையில் சிறிய படகுகள் இயக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது, என்றார்.