districts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் தீ விபத்து

திருப்பூர், ஆக.26– திருப்பூர் பின்னலாடை நிறுவனத் தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேத மாகின. திருப்பூர் - மங்கலம் சாலை, ஆண்டி பாளையம் பகுதியில் இருந்து இடு வம்பாளையம் செல்லும் சாலையில் பாலாமணி என்பவருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. பின்ன லாடை துணிகள் உற்பத்தி செய்யப் படும் இந்நிறுவனத்தில் பின்னலாடை உற்பத்திக்கு பயன்படும் இயந்திரங்கள் மற்றும் பின்னலாடை துணிகள் வைக் கப்பட்டிருந்தன. ஞாயிறன்று விடு முறை தினம் என்பதால் நிறுவனம் பூட் டப்பட்டிருந்தது. இந்நிலையில் நள்ளி ரவு 12 மணி அளவில் நிறுவனத்தில் தீப் பற்றி எரிந்தது. இங்கு அடுக்கி வைக்கப் பட்டிருந்த துணி பண்டல்களில் தீ பற்றிப் பரவி எரிந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக பின்ன லாடை நிறுவன உரிமையாளருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தக வல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ  இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு தீய ணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகப் போராடி தீயை  கட்டுக்குள் கொண்டு வந்தனர். மின்  கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டி ருக்கக்கூடும் என முதற்கட்ட விசாரணை யில் தெரிய வந்தது. இந்த தீ விபத்தில்  பின்னலாடை நிறுவனத்தில் பல லட்சம்  ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து  சேதமடைந்துள்ளது. இதுகுறித்து திருப்பூர் மத்திய காவல் துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.