districts

img

இந்தோ சோவியத் நட்புறவு கழகம் சார்பில் கலாச்சார கலை நிகழ்ச்சி

நாமக்கல், ஜன.24- குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இந் தோ சோவியத் நட்புறவு கழகத்தினர் நடத்திய கலாச்சார கலை  நிகழ்ச்சியில் ரஷ்ய கலைஞர்கள் நடனமாடி அசத்தினர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் உள்ள தனி யார் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியில், இந் தோ சோவியத் நட்புறவு கழகத்தின் சார்பில் இந்திய அரசியல்  கலாச்சாரத்தை விளக்கும் வகையில், ரஷ்யன் பெஸ்டிவல்  என்ற தலைப்பில், ரஷ்ய கலைஞர்களின் நடன நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் பங்கு பெற்ற ரஷ்ய கலைஞர்கள் பேலட்  என்ற குழு நடனமும், போக் டான்ஸ், ஆக்ரோபாடிக்ஸ் என்ற தலைகீழாக ஆடும் நடனம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத் திக்காட்டி அசத்தினர். இந்நிகழ்ச்சியினை கல்லூரி மாணவ  மாணவிகள் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை சென்னையில் உள்ள இந்தோ ரஷ்யா சேம்பர் ஆப்  காமர்ஸ் ஆண்டு இண்டஸ்ட்ரீஸ் அமைப்பினர் செய்திருந்த னர். இதுகுறித்து இந்திய சோவியத் வர்த்தக சபை பொது செய லாளர் தங்கப்பன் கூறுகையில், இந்திய சோவியத் நட்புறவை  வளர்க்க இதுபோன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதா கவும், தொடர்ந்து பல ஆண்டுகளாக நடந்து வந்த கலை நிகழ்ச்சிகள் கொரோனா காலத்தில் தடைபட்டிருந்தது, தற் போது மீண்டும் தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.