தருமபுரி, மார்ச் 16- விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கேரளா அரசு விவசாய கூலி தொழிலாளர்களுக்கு ரூ.600 வழங்கு வது போன்று, தமிழ்நாட்டிலும் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண் டும். விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறை உருவாக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.கோவிந்தசாமி தலைமை ஏற்றார். இதில், மாநில பொதுச்செயலாளர் வி. அமிர்தலிங்கம், மாவட்ட செயலாளர் எம்.முத்து, மாவட்ட பொருளாளர் சிவா உள்ளிட்டோர் உரையாற்றினர். மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் மாவட்ட செய லாளர் எம்.மாரிமுத்து வாழ்த்தி பேசி னார்.
நாமக்கல்
இதேபோன்று நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விதொச மாவட்ட செயலாளர் குருசாமி தலைமை ஏற்றார். விதொச மாநிலக்குழு உறுப்பினர் செல்வராஜ் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார். இதில், மாநி லச் செயலாளர் சி.துரைசாமி, மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.கோவிந்தசாமி, குமாரபாளையம் நகர சிபிஎம் செயலா ளர் எம்.ஆர்.முருகேசன் உள்ளிட்ட திர ளானோர் பங்கேற்றனர். இதில் பல்லாக்காபாளையம், தட் டான் குட்டை, கொக்கராயன் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நிலமற்ற ஏழை மக்களுக்கு அரசு புறம்போக்கு நிலங்க ளில் வீட்டுமனை பட்டா வழங்க வேண் டும். கரும்பு வெட்டும் தொழிலில் ஈடு படும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு டன் கூடிய சீருடை, காலணி, ரப்பர் ஷு இலவசமாக வழங்க வேண்டும். வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே வழங்க வேண்டும். கரும்பு வெட்டும் போது ஏற் படும் விபத்திற்கு மருத்துவ செலவி னத்தை அரசும், ஆலை நிர்வாகமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டதில் வலியு றுத்தப்பட்டன.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலை வர் ஜி.கணபதி தலைமையில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. போராட்டத்தை சிஐ டியு மாவட்ட தலைவர் டி. உதயகுமார் துவக்கி வைத்தார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.கே.சேகர், மாவட்ட பொருளாளர் எம்.மாரிமுத்து உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றனர்.
கோவை
இதேபோன்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலா ளர் ஏ.துரைசாமி தலைமை ஏற்றார். ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து மாவட்ட தலைவர் பி.ரவிச்சந்திரன், விதொச பொள்ளாச்சி தாலுகா செயலா ளர் கே.ஏ.பட்டீஸ்வரமூர்த்தி ஆகி யோர் உரையாற்றினர். இதில், ஆனை மலை ஒன்றிய செயலாளர் எ.முத்துச் சாமி, பொள்ளாச்சி கமிட்டி தலைவர் பி.ஆனந்தராஜ், ஆனைமலை ஒன்றிய தலைவர் ஜி.சுரேஷ்குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.