நாமக்கல், ஜன.6- ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத குண் டும், குழியுமான சாலையால் கர்ப்பிணிக ளுக்கு சாலையிலேயே பிரசவம் நடைபெறு வதாகவும், ஊர்முடிபட்டி கிராமத்திற்கு புதிய தார்ச்சாலை வசதி கேட்டு மார்க்சிஸ்ட் கட்சி யினர் காத்திருப்பு பேராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட் டம் சேலூர் நாடு, ஊர்முடிபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள மலை கிராமங்களில் 250க்கும் மேற் பட்ட குடியிருப்புகளில், ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமங் களுக்கு பிரதான சாலையாக இருப்பது வெள் ளக்கல் ஆறு முதல் ஊர்முடிபட்டி வரை செல் லும் கிராம சாலையாகும். இது செம்மேடு முதல் வெண்கலபாடி வரை செல்லக்கூடிய பிரதான சாலையை இணைக்கிறது. இச் சாலை கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்டது. தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட அந்த சாலை மிகவும் மோச மான நிலையில் உள்ளது.
தற்போது பழுத டைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இத னால் அவசர தேவைக்கு 108 ஆம்புலன்ஸ் கூட தங்களது கிராமத்திற்கு வர முடியாமல் கர்ப் பிணிகளுக்கு சாலையிலேயே பிரசவம் நடை பெறுகிறது. அடிக்கடி வாகனங்களில் வருப வர்கள் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து வருகின்றனர். இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் துவங்கி அனைத்து மட்டங்களி லும் கோரிக்கை மனு அளித்தும் எந்த நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில், சேலூர் நாடு ஊர்முடி பட்டி கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத் திற்கு சிபிஎம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பி னர் இ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி னார். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்ட தலைவர் எஸ்.தங்கராஜ், ஒன் றிய தலைவர் எஸ்.கே.மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை கட்சி யின் முன்னாள் ஒன்றிய செயலாளர் வி.கே. வெள்ளைச்சாமி துவக்கி வைத்தார். சிபிஎம் நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன் கோரிக்கைகள் குறித்து உரை யாற்றினார். முன்னதாக, புதிய சாலை வசிதி கேட்டு சேலூர் நாடு ஊர்முடிபட்டி கிராம மக்கள் கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்திற்கு பாத்திரங்கள், விறகு, பாய் படுக்கையு டன் சமைத்து சாப்பிடும் ஏற்பாடுடன் பேரணி யாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தார்ச் சாலை கிடைக்கும் வரை காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.
இத னையடுத்து, கொல்லிமலை ஊராட்சி ஒன் றிய அலுவலர் (கிராம ஊராட்சி) தனசேகரன் தலைமையில், காவல்துறை அதிகாரிகள் பங் கேற்ற பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சேலூர் நாடு ஊர்முடி பட்டி கிராமத்திற்கு உடனடியாக தார்ச்சாலை அமைத்து தர அரசிற்கு பரிந்துரை அனுப்பு வதாகவும், விரைவில் தார்ச்சாலை அமைத்து தரப்படும் என்று எழுத்துப்பூர்வமாக ஊராட்சி ஒன்றிய அலுவலர் (கிராம ஊராட்சி) தனசேக ரன் உறுதிமொழி அளித்ததன் பெயரில் போராட் டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவர்கள் வி.எஸ்.மணி பழனி கவுண்டர், பூசாரி ரவி, எஸ்.சுரேஷ், எஸ்.கே. ஆண்டி உட்பட திரளானோர் பங்கேற்றனர்.