உடுமலை, பிப்.16- பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் போது தங்க ளின் உயிரையும் தியாகம் செய்ய துணிந்தவர்கள் செங்கொடி தோழர்களே என மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தெரிவித்தார். உடுமலை மற்றும் மடத்து குளம் பகுதியில் நடைபெறும் பேரூராட்சி தேர்தலில் போட்டி யிடும் மதச்சார்பற்ற கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன் செவ்வாயன்று தேர் தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன்ஒருபகுதியாக, உடுமலை தாலுகா தளி பேரூராட்சியில் போட் டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதர வாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அதன்பின்னர் நடை பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசுகையில், தளி பேருராட்சியில் வேட்பாளராக போட்டியிடும் நான்குபேரில், இருவர் ஏற்க னவே இத்தொகுதிக்காக பணி யாற்றியவர்கள். இவர்கள் கடந்த முறை இப்பகுதியில் பொதுமக் களிடம் ஒரு பைசா கூட பணம் பெறாமல் செய்த வேலைகளை பட்டியிலிட்டு வாக்கு கேட்டு வரு கிறார்கள். ஆனால் எதிர் வேட்பா ளர்களோ பையில் பணத்தை வைத்துக் கொண்டு வாக்கு சேக ரிக்க வருகிறார்கள். தேர்தல் என் பது வியாபாரம் அல்ல, பணத்தை முதலீடு செய்து மீண்டும் பணத்தை எடுக்க. ஓட்டுக்கு பணம் தருபவர்களை பொதுமக்கள் புறக் ்கணிக்க வேண்டும் என்றார். இதைத்தொடர்ந்து மடத்துக்கு ளம், கொமரலிங்கம் மற்றும் சங் கரமநல்லூர் பேரூராட்சியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கட்சி யின் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப் போது அவர் பேசுகையில், கம்யூ னிஸ்ட் கட்சியின் மக்கள் நலன் செயல்பாடுகளுக்கு தற்பொழுது வெளிவந்த ஜெய்பீம் திரைப்ப டமே சிறந்த உதாரணமாக உள் ளது. பொதுமக்களின் நலனுக்கா வும், தலித் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற் படும் போதும் செங்கொடி தோழர் கள் தங்களின் உயிரை தியாகம் செய்ய துணிந்தவர்கள். எனவே, மக்களின் அடிப்படை தேவையாக குடிநீர், சாக்கடை மற்றும் பொது சுகாதாரம் வசதிகள் கிடைக்க மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் களை வெற்றி பெற செய்ய வேண் டும். முன்னதாக, தளி மற்றும் கொம ரலிங்கம் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எஸ்.ஆர். மதுசூதனண், உண்ணிகிருஷ்ணன், உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கனகராஜ், மடத்துக்குளம் தாலுகா செயலா ளர் ஆர்.வி.வடிவேல் ஆகியோர் உள்ளிட்ட கூட்டணி கட்சியின் முன் னணி நிர்வாகிகள் உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.