திருப்பூர், மே 4- உடுமலை ஒன்றியத்தில் நிறுத்தப் பட்ட பேருந்துகளை முறையாக இயக் கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உடுமலைப்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக கிளை மேலாள ரிடம் மனு அளிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் உடுமலை ஒன்றிய செயலாளர் கி.கன கராஜ் அளித்த மனுவில் கூறியிருப் பதாவது, உடுமலையிலிருந்து மலை யாண்டிபட்டினம், குரல்குட்டை, ஆலாம்பாளையம், குறிச்சிக்கோட்டை வழியே திருமூர்த்திமலைக்கு இயக்கப் பட்டுவந்த 6பி எண் கொண்ட பேருந்து கடந்த ஒரு மாதகாலமாக மதியம் 12 மணி, 2மணி மற்றும் இரவு 7.45 மணிக் கும் வர வேண்டிய பேருந்து வருவ தில்லை. இதனால் பணிக்குச் செல் வோர், பணி முடித்து வருவோர், மாண வர்கள், பெண்கள் கடுமையாக பாதிக் கப்படுகின்றனர். உடனடியாக நிறுத்தப் பட்ட பேருந்தை இயக்கிட வேண்டும். மேலும் உடுமலை ஒன்றியத்திலும், குடிமங்கலம் ஒன்றியத்தின் பல் வேறு பகுதிகளுக்கும் சென்று கொண்டி ருந்த 20 க்கும் மேற்பட்ட பேருந்துகள் பல்வேறு நேரங்களில் நிறுத்தப்பட் டுள்ளது. எனவே அனைத்து பேருந்து களும் இயக்கப்பட வேண்டும். காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு ஏற்கெனவே உள்ள வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இந்நிகழ்வில், ஆலாம்பாளையம் சிவசுப்ரமணியம் உடனிருந்தார். மனுவை பெற்று கொண்ட சிடிசி கிளை மேலாளர் கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.