திருப்பூர், ஜூலை 5- அவிநாசி வஉசி பூங்காவை பராமரிப்பு செய்ய வலயுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவிநாசி பேரூராட்சி அலுவலகத்தில் புதனன்று மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரூராட்சி அலுவ லகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, கங்கவர் வீதியில் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக குழிகள் தோண் டப்பட்டதால், சாலைகள் பழுதடைந்து வாகனங்கள் செல்ல இடையூறாக இருக்கிறது. இதை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும் சாக்கடையை சரி செய்து சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இப்பகுதியில் உள்ள பொதுக் கழிப்பி டத்தை சீரமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அவினாசி வஉசி பூங்காவை முழுமையாக பராம ரிப்பு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் பழனிச் சாமி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, தேவி, கிளைச் செயலாளர் சந்திரன், கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.