districts

img

திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் சிபிஎம் உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல்

தருமபுரி, ஜூன் 10- திட்டக்குழு உறுப்பினர் களுக்கான தேர்தல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, தருமபுரி, கோவை மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் பேரூ ராட்சி மன்ற உறுப்பினர்கள் மனு தாக்கல் செய்துள் ளனர். தருமபுரி மாவட்ட திட் டக்குழு உறுப்பினர்களுக் கான தேர்தலில் மார்க் சிஸ்ட் கட்சியின் பாப்பாரப் பட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர் வே.விசுவ நாதன், தருமபுரி மாவட்ட ஊராட்சி அரங்கில், உதவி  தேர்தல் நடத்தும் அலுவல ரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். கோவை  இதேபோன்று, கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பெரிய நாயக்கன்பாளையம்  பேரூராட்சி உறுப்பினர்  என்.சிவராசன் மற்றும் இருகூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் எஸ்.ஸ்டாலின்குமார் ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பேரூராட்சி இயக்குநர் துவாரநாத் சிங்கிடம் வேட்பு மனுக்களை தாக்கல் செய் தனர். இந்நிகழ்வின்போது, மார்க்சிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்ட செயலாளர் சி.பத்ம நாபன் உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந் தனர்.