அவிநாசி, ஜூலை 29 – திருமுருகன்பூண்டி நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு, யாராக இருந்தாலும் கட்டாயம் ரூ.6 ஆயிரம் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப் பினர் சுப்பிரமணியம் வலியுறுத்தினார். அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட திருமு ருகன்பூண்டி நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் குமார் தலைமையில், நகரமன்ற ஆணையர் சம்சுதீன் முன்னிலையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை சேர்ந்த 10ஆவது வார்டு நக ரமன்ற உறுப்பினர் சுப்பிரமணி பேசுகையில், முறைகேடான குடிநீர் இணைப்பை முறைப்ப டுத்த நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட் டதில், ஒரு குடிநீர் இணைப்புக்கு 28 ஆயிரம் ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப் பட்டது, சிலர் எப்படியாவது குடிநீர் இணைப்பு பெற வேண்டும் என்ற உந்துதலில் அபராதத் தொகை செலுத்திவிட்டால், பிறகு குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம் என நினைத்து பணம் செலுத்திவிட்டனர்.
ஆனால் முறைகேடான குடிநீர் இணைப்பு பெற்ற வர்கள் அபராதம் போக 6000 ரூபாய் வைப்புத் தொகை செலுத்த வேண்டும் என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட நகர்மன்ற தலைவர் குமார், முறைகேடான குடிநீர் இணைப்புக்கு ரூ.28,000 செலுத்தி விட்டார்கள். இதில் இருந்தே ரூ.6000 வைப்புத்தொகை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார். இருப்பி னும் சுப்பிரமணி புதிய குடிநீர் இணைப்பு வழங்க ஆட்சேபனை கிடையாது. ஆனால் கட்டாயம் குடிநீர் இணைப்புக்கு கூடுதலாக 6000 ரூபாய் வைப்பு தொகை செலுத்த வேண்டும், அதேபோல நகராட்சி எல்லைகளில் இருந்து பப்பிஸ் ஹோட்டல் வரை சோலார் தெருவிளக்கு அமைக்கப்பட்டு இருக்கிறது, இடைப்பட்ட இடங்களில் அமைக்கப்படாமல் இருந்து வருகிறது. உடனடியாக அமைத்து தர வேண்டும், மாதம்தோறும் ஜேசிபி இயந் திரம், டிப்பர் லாரிக்கு குப்பை அள்ளும் பணிக்காக 38000 ரூபாய் தனியாருக்கு கட்ட ணம் செலுத்திக் கொண்டு வருகிறோம், உடன டியாக நிதி ஒதுக்கீடு செய்து புதிய டிப்பர் லாரி மற்றும் ஜேசிபி இயந்திரம் வாங்க வேண்டும், நகராட்சியில் தற்காலிகமாக பணியாற்றும் தூய்மை பணியாளர் மற்றும் குடிநீர் ஆபரேட் டர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அதேபோல நிரந்தரமாக பணியாற்றும் ஊழி யர்களுக்கு அரசு அறிவித்துள்ள சம்பள உயர்வு வழங்க வேண்டும், நகராட்சி அலுவல கம் பின்புறமாக உள்ள அறநிலையத்துறைக் குச் சொந்தமான நிலத்தை, நகராட்சி அலு வலக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும் என்று போன நகராட்சி கூட்டத்தில் பேசப் பட்டது. இது குறித்து எந்தவிதமான பதிலும் வரவில்லை, 5 லட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக மின்மோட்டார் வாங்க வேண்டும் என்று மன்ற பொருளில் வைக்கப்பட்டது.
முன்பு வாங்கப் பட்ட மின்மோட்டார்கள் எங்கே? நமக்கு நாமே திட்டத்தில் மூன்று லட்சம் ரூபாய் பொதுமக் களின் பங்களிப்போடு 12 லட்சம் மதிப்பீட்டில் சாலை வசதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ஏன் இன்னும் பணி துவங்கவில்லை? உடனடி யாக பணிகளை துவக்க வேண்டும். நகராட்சி யில் படுக்கை வசதிகள் கூடிய அரசு மருத்துவ மனை அமைப்பதற்கு இடம் தேடிக் கொண்டுள்ளனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் இட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சுப்பிர மணியம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 14 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் தேவராஜ் பேசுகை யில், உமையஞ்செட்டிபாளையம் பகுதிக்கு தண்ணீர் குழாய் பதிப்பதற்காக ஐம்பதா யிரம் மதிப்பீட்டில் மன்ற பொருள் வைக்கப் பட்டுள்ளது. ஆனால் இதனுடைய செலவு 25000 மட்டுமே இருக்கும். நீங்கள் வைத்தது ஐம்பதாயிரம் என்பது கூடுதலாக உள்ளது. சிவா நகர் பகுதியில் மின் மோட்டார் இயங்கு வதற்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். முறைகேடான குடிநீர் இணைப்புக்கு 28000 செலுத்தியவர்களிடம், இதுபோக வைப்புத் தொகை 6000 ரூபாய் பெற்றுக்கொண்டு இணைப்பு வழங்க வேண்டும். மன்ற பொருள் குறித்தான சுற்றறிக்கை நகர மன்ற உறுப்பினர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்பே வழங்க வேண்டும் என்று போன கூட் டத்தில் பேசப்பட்டது.
ஆனால் அதனை நடை முறைப்படுத்தாமல் ஒரு நாளுக்கு முன்பு சுற்ற றிக்கை வழங்குவது நடைமுறையில் உள் ளது. இதனை மாற்றம் செய்ய வேண்டும் என்றார். இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 22 ஆவது வார்டு நகரமன்ற உறுப் பினர் பார்வதி பேசுகையில், அரசுப் பள்ளியை தூய்மைப்படுத்த போதிய துப்புரவு பணியா ளர்களை நியமிக்க வேண்டும், திருமுருகன் பூண்டி கோவில் அருகே உள்ள கழிப்பி டத்தை புதுப்பித்து தர வேண்டும் என தெரி வித்தார்.
இக்கூட்டத்தில் பிளம்பர் முருகே சனை பணி நியமனம் செய்ய வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத் துள்ளனர். இதில் பிளம்பர் முருகேசன் என்ப வர் 22 ஆவது வார்டு பகுதியில் முறைகேடான குடிநீர் இணைப்பு வழங்கியதால் நீக்கம் செய் துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக குடிநீர் இணைப்பு பிரச்சனை குறித்து அதிமுகவை சேர்ந்த முன் னாள் தலைவர் லதா கேட்கும்போது, இதற்கு பதில் அளித்த நகரமன்ற குமார், நீங்கள் பேசு வது எனக்கு புரியவில்லை என கூறினார். இத னால் ஆத்திரமடைந்த லதா, நகர மன்ற உறுப்பினர்கள் கூறுவதே புரியவில்லை என் றால் நீங்கள் எப்படி தலைவர் ஆனீர்கள் என்று கேட்டவுடன் வாக்குவாதம் முற்றிக்கொண் டது. மேலும் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் கள் பேசுவதை கேட்பதற்காக அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு மறைமுகமாக நகராட்சி நிர் வாகம் சார்பில் அலுவலகத்தின் பின்புறமாக இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.