அவிநாசி, செப்.10- அவிநாசி சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடை பெறாமல் இருக்கும் சாக்கடை மற்றும் சாலைப் பணிகளை உடனடியாக துவங்க வேண்டும் என சிபிஎம் கிளை மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவிநாசி ஒன்றிய பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் புதிய கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அனைப்புதூர் கிளைச் செயலாளர் பாண்டி யன், அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண் டம்பாளையம் செயலாளராக தினகரன், போத்தம்பாளையம் செயலாளராக வேலுச் சாமி, கானூர்புதூர் செயலாளராக ஜீவா னந்தம், பச்சாம்பாளையம் செயலாளராக பழ னிச்சாமி, கருவலூர் செயலாளராக அருண், புளக் காட்டுபாளையம் செயலாளராக சுப்ரம ணியன், காட்டுவளவு செயலாளராக தங்க ராசு, காட்டுவளவு மாதர் கிளை செயலாளராக கோமதி, பெரியாயிபாளையம் கிளைச் செயலாளராக ராமன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த கிளை மாநாடுகளில் அவிநாசி சுற்று வட்டார கிராமப்பகுதிகளில் நிதி ஒதுக்கீடு செய் யப்பட்டு சாலை மற்றும் சாக்கடை அமைக் கும் பணிகள் தொடங்காமல் உள்ளதை உடன டியாக தொடங்க வேண்டும். அவிநாசி பேரூ ராட்சிக்கு உட்பட்ட பாலச்சந்தர் மருத்துவம னையில் முதல் சட்டமன்ற உறுப்பினர் அலுவ லகம் வரை சாலை விரிவாக்கம் செய்ய வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த ஒன்றியச் செயலாளர் ஈஸ்வர மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் பழனி சாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்மு கம், பாலசுப்பிரமணியம், ராஜன், காமராஜ், வையாபுரி, கருப்புசாமி, பழனிசாமி, குமார சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் நடைபெற்ற கிளை மாநாடுகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடிகள் ஏற் றப்பட்டது. கருவலூர் கிளை மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி யினை, கட்சியின் முன்னாள் மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.ராஜூ ஏற்றினார்.