ஈரோடு, நவ.9- மக்கள் கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் சனியன்று பெருந்துறை தாலு காவிற்குட்பட்ட பகுதிகளில் பிரச் சாரத்தில் ஈடுபட்டனர். விவசாய விளைப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட் ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். சிறு குறு தொழில்களை பாதுகாக்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற மோசடி முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் நடைபெற்றது. ஈங்கூரில் தொடங்கிய பிரச்சார இயக்கத்திற்கு சென்னி மலை ஒன்றியப் பொறுப்பாளர் ராம சாமி தலைமை வகித்தார். இதில், சிபிஎம் ஈரோடு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.பரமசிவம், தாலுகாச் செயலாளர் அர்ச்சுனன், மூத்த தோழர் கள் குப்புசாமி, மயில்சாமி, முன்னாள் தாலுகாச் செயலாளர் முத்து பழனிச் சாமி மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் மக் கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தனர். வெள்ளோடு, குமரன் சிலை, பெருந்துறை ரயில் நிலையம், தலவுமலை, கேஜி வலசு, கேகே வலசு, உப்பிலிபாளையம், ஓட்டப் பாறை, பசுவபட்டி பிரிவு, வெப் பிலி பிரிவு, அய்யம்பாளையம், பால தொழுவு, எல்லமேடு, எல்லை காடு, கரட்டு பாளையம், மேலப்பாளை யம், காந்தி நகர், தோப்பு பாளை யம், சென்னிமலை பேருந்து நிலை யம் மற்றும் குளத்து பாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச் சாரம் கொடாயூரில் நிறைவடைந் தது. தொடர்ந்து, ஞாயிறன்று (இன்று) மேட்டுக்கடையில் தொடங்கி பெருந் துறை பேரூராட்சி, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சி, பள்ள பாளையம், காஞ்சிகோயில், பெத் தாம்பாளையம், நல்லாம் பட்டி, விஜய மங்கலம், சீனா புரம் மற்றும் துடுப் பதி ஊராட்சி ஆகிய பகுதிகளில் நடை பெறும் வாகன பிரச்சாரம் பெருந் துறை பேருந்து நிலையத்தில் நிறை வடைகிறது.