உதகை, நவ.29- நகராட்சியில் முறையாக வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை கருப்புப் பட்டியலில் சேர்க்க வேண்டும், என உதகை நகர்மன்றக் கூட்டத்தில் கவுன் சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம், உதகை நகர் மன்ற சாதாரணக் கூட்டம் வெள்ளியன்று, தலைவர் வாணீஸ்வரி தலைமையல் நடைபெற்றது. புதிதாக நியமிக்கப் பட்டுள்ள ஆணையர் இன்னும் பொறுப் பேற்காததால், பொறியாளர் சேகரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத் தில், நகர்மன்ற துணைத்தலைவர் ரவிக் குமார் பேசுகையில், நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் முறையாக குப்பை கள் சேகரிக்கப்படாத நிலையில், பல் வேறு பகுதிகளிலும் குப்பைகள் தேங்கி யுள்ளது. பொது இடங்களில் குப்பை கள் போடாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதிகளில் கேம ராக்கள் பொருத்தி பொது இடங்களில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து வரும் முக் கிய குடிநீர் குழாய்களில் உள்ள துணை இணைப்புகளை முறைப்படுத்த வேண் டும். கழிவுநீர் கால்வாய்களை சீர மைக்க வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் பேசுகையில், நகராட்சிக்கு சொந்தமான பெரிய வீடுகள் மற்றும் பங்களாக் களில் வசதியானர்கள் குடியிருந்து வரு கின்றனர். அவர்களை, வெளியேற்றி விட்டு நகராட்சி ஊழியர்களுக்கு அந்த வீடுகளை வழங்க வேண்டும். மேலும், நகராட்சி குடியிருப்புக்களில் உள்ள வர்களிடம் வாடகை முறையாக வசூ லிக்க வேண்டும். 3 மாதங்களுக்கு மேலாக வளர்ச்சிப் பணிகளுக்கு டெண் டர் விடப்படாமல் உள்ளது. நகராட்சி யில் முறையாக வேலை செய்யாத ஒப்பந்ததாரர்களை கருப்புப்பட்டிய லில் சேர்க்க வேண்டும். அனைத்து கழிப் பிடங்களையும் சீரமைத்து, பொதுமக்க ளிடம் முறையான கட்டணத்தை வசூ லிக்க அறிவுரை வழங்க வேண்டும். குளிச்சோலை பகுதியில் குடிநீர் குழாய் கள் அமைத்து, முறையாக குடிநீர் வழங்க வேண்டும். சாலைகளை சீர மைக்க வேண்டும். குடியிருப்புப் பகுதி மற்றும் சாலைகளில் அதிகளவில் உலா வும் காட்டுப்பன்றி, குதிரை, மாடு போன்றவற்றை கட்டுப்படுத்த வேண் டும், என்றனர்.