கோவை, ஜூன் 11- கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று ஒற்றை இலக்கத்திலிருந்த நிலையில், தற்போது இரட்டை இலக் கத்தை எட்டியுள்ளது. இதனையடுத்த தடுப்பு நடவடிக் கையை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்த 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் ஒற்றை இலக்கில் கொரோனா தொற்று இருந்து வந்தது. இந்நிலையில், கோவை மாவட் டத்தில் தற்போது கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கி லிருந்து, இரட்டை இலக்காக மாறியுள்ளது. கடந்த வாரங் களில் 3 முதல் 8 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்தது. சனியன்று நிலவரப்படி மாவட்டத்தில் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனா காரணமாக பாதிக்கப் பட்ட நபர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது, கொரோனா காரணமாக மருத்து வமனை மற்றும் வீடுகளில் 56 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் தற்போது வரை கொரோ னாவால் 2 ஆயிரத்து 617 பேர் இறந்துள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கை யுடன் இருக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி யுள்ளனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகை யில், கோவை மாநகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது முககவசம் அணிந்து செல்ல வேண்டும். தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். பொது இடங்களில் தனிமனித இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனா அறிகுறி கள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்து வமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண் டும், என்றனர்.