districts

img

ஊதியம் கேட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் தற்கொலை மிரட்டல்

சேலம், ஜன.11- மேட்டூர் அருகே செயல்பட்டு வரும் சேலம் மாநகராட்சி தனி குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் பணிபு ரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள், இரண்டு மாத ஊதியம் கேட்டு தற் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள தொட்டில்பட்டியில், சேலம் மாந கராட்சி தனி குடிநீர் நீரேற்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. நான்கு ராட்சத மின்மோட்டார்களை கொண்டு நாள் ஒன்றுக்கு சுமார் 158 எம்எல்டி தண்ணீர் சேலம் மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த பணிகளை மேற் கொள்வதற்கு சுமார் 20 ஒப்பந்த தொழி லாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்ற னர். இந்நிலையில், இத்தொழிலாளர்க ளுக்கு கடந்த இரண்டு மாதமாக சம்ப ளம் வழங்காமல், மாநகராட்சி நிர்வா கம் காலம் தாழ்த்தி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங் களே இருப்பதால் பண்டிகை செலவு செய்வதற்கு கூட பணம் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கும், மன உளைச்ச லுக்கும் தொழிலாளர்கள் ஆளாகி வரு கின்றனர். இந்நிலையில், தொட்டில் பட்டி தனி குடிநீர் நீரேற்று திட்டத்தின் பயன்படுத்தப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் காவல்துறை மற்றும் வருவாய்த் துறை யினர் தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த் தையில் ஈடுபட்டு வருகின்றனர். பணி யை புறக்கணித்து ஒப்பந்த தொழிலா ளர்கள் இப்போராட்டத்தால் சேலம் மாநகராட்சி தனிக்குடி நீர் திட்டத்திற்கு குடிநீர் விநியோகம் பாதிக்கும் சூழ்நி லை உள்ளது.